search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வீரபத்திரர்-பால் அபிஷேகம்
    X

    வீரபத்திரர்-பால் அபிஷேகம்

    • பசுவின் பாலினையும் வெள்ளிக்குடத்திலே கறந்தெடுக்க வேண்டும்.
    • பால் கறக்கும் போதோ அபிஷேகம் செய்யும் போதோ அதில் மூச்சுக்காற்று படுதல் கூடாது.

    வீரபத்திரர்-பால் அபிஷேகம்

    இறைவன் கொடுத்த பொருட்களை, முதலில் இறைவனுக்குப் படைப்பது நமது வழக்கமாகும்.

    எனவே தான் தூய்மையை விரும்பும் ஸ்ரீவீருபத்திரருக்குத் தூய்மையான பொருளாகிய பாலைக் கொண்டு, திருமஞ்சனம் செய்கின்றனர்.

    தீர்த்தம் கொண்டு அபிஷேகம் முடித்தவுடன் கறந்த பசுவின் பால் கொண்டு அபிஷேகம் செய்தல் வேண்டும்.

    பாக்கெட் பால், பவுடர் பால், எருதின் பால் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த கூடாது.

    பசுவின் பால் மட்டுமே பூஜைக்கு உகந்தது.

    பசுவின் பாலினையும் வெள்ளிக்குடத்திலே கறந்தெடுக்க வேண்டும்.

    கறக்கும் போதோ கறந்த பிறகோ வெள்ளிக்குடத்தினைக் கீழே வைத்தல் கூடாது.

    ஸ்ரீ வீரபத்திர உபாசகர் தாமே தம் கைகளாலேயே வெள்ளிக்குடத்தைப் பிடித்துக் கொண்டு பால் கறக்க வேண்டும்,

    கறந்த பாலின் சூடு ஆறுவதற்கு முன்பாகத் தன் வலது தோளில் பாற்குடத்தைச் சுமந்து சென்று ஸ்ரீ வீரபத்திருக்கு அபிஷேகம் செய்தல் வேண்டும்.

    பால் கறக்கும் போதோ சுமக்கும் போதோ அபிஷேகம் செய்யும்போதோ அதில் மூச்சுக்காற்று படுதல் கூடாது.

    பூவந்திக் கிராமம், அய்யாக்கன்மாய் வீரபத்திரருக்கு நீர், பால் மட்டுமே கொண்டு திருமஞ்சனம் செய்வார்கள்.

    Next Story
    ×