search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வீரபத்திரருக்கான அபிஷேகங்கள்
    X

    வீரபத்திரருக்கான அபிஷேகங்கள்

    • தண்ணீர் குடத்தை கீழே வைக்கக் கூடாது.
    • நீர் இறைக்க எவர் உதவியையும் நாடுதல் கூடாது.

    வீரபத்திரருக்கான அபிஷேகங்கள்

    நீர் அபிஷேகம்

    ஸ்ரீ வீரபத்திரருக்கு எல்லா ஆலயங்களிலும் தினமும் காலை நீர் அபிஷேகம் செய்கின்றனர்.

    இந்த நீர் அபிஷேகத்தை செய்வது எப்படி தெரியுமா?

    வலது கை மணிக்கட்டில் கறுப்புக் கயிறு கட்டி ஸ்ரீ வீரபத்திரரை உபாசிக்கும் தகுதி படைத்த உபாசகர் தம் கைகளாலேயே ஸ்ரீ வீரபத்திரருக்குரிய திருமஞ்சன நீரைக் கோவில் கிணற்றில் இருந்தோ, நதிகளில் இருந்தோ எடுத்து வர வேண்டும்.

    அவ்வாறு எடுக்கும் நீரை வெள்ளிக் குடத்தில் நிரப்பிக் கொண்டு வர வேண்டும்.

    நதியில் எடுக்கும் நீராக இருந்தாலும் சரி, கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீரானாலும் சரி, ஸ்ரீ வீரபத்திரர் வழிபாட்டிற்கு என்றே வைத்திருக்கும் தனிப்பட்ட வெள்ளிக் குடத்தில் மட்டுமே எடுக்க வேண்டும்.

    அவ்வாறு எடுத்த நீரை பூசாரி தன் வலது தோளில் சுமந்து, எடுத்து வந்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

    எடுத்து வரும் நீரை எக்காரணம் கொண்டும் எங்கும் கீழே வைக்காமல் உடனேயே வலது தோளில் வைத்து எடுத்து வர வேண்டும்.

    கரம் மாற்றுதலோ இடம் மாற்றுதலோ கூடாது.

    தண்ணீர் குடத்தை கீழே வைக்கக் கூடாது.

    பிறர் கைபடுதலோ கூடாது.

    நீர் இறைக்க எவர் உதவியையும் நாடுதல் கூடாது.

    Next Story
    ×