என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

தமிழ் மாத பிறப்பு வழிபாடு
- தமிழ் மாத பிறப்பு அன்று திருவண்ணாமலையில் பஞ்ச மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடத்துவார்கள்.
- அந்த மாத பிறப்பு மண்டபம் மிக மிக பழமையானது.
ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு அன்றும் திருவண்ணாமலையில் கிரிவலம் நடைபெறுவது பழங்காலத்தில் மிகவும் புகழ் பெற்று இருந்தது.
தற்போது அது குறைந்து பவுர்ணமிக்கு கிரிவலம் செல்வது அதிகரித்து உள்ளது.
தமிழ் மாத பிறப்பு அன்று திருவண்ணாமலையில் பஞ்ச மூர்த்திகளுக்கும் அபிஷேக சிறப்பு ஆராதனைகள் நடத்துவார்கள்.
அன்று மாலை இரண்டாம் கால பூஜையின்போது பஞ்ச மூர்த்திகளையும் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள மாத பிறப்பு மண்டபத்துக்கு எழுந்தருள செய்வார்கள்.
அந்த மாத பிறப்பு மண்டபம் மிக மிக பழமையானது.
அந்த மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளையும் அலங்காரத்துடன் பார்ப்பது கண்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும்.
Next Story






