search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சவுபாக்கியம்  தரும்  கோபூஜை
    X

    சவுபாக்கியம் தரும் கோபூஜை

    • முன்பு ஒவ்வொரு வீட்டிலும் பசுவினை வளர்த்து வந்தார்கள்.
    • வசதியுள்ளவர்கள் 108 பசுக்களைக் கொண்டு பெரிய அளவில் கோபூஜை செய்யலாம்.

    ஒருமுறை திலீப மகாராஜனின் அசுவமேதக் குதிரை யை தூக்கிச் சென்ற தேவேந்திரன் மாயையால் தன்னை மறைத்துக் கொண்டான்.

    குதிரையை தேடிச்சென்ற ரகு மகாராஜன், கோசலத்தால் (கோமியம்) தன் கண்களைக் கழுவிக்கொள்ள,

    தேவேந்திரனின் மாயை அகன்றது.

    ரகு தேவேந்திரனிடமிருந்து அசுவமேதக் குதிரையை மீட்டு வந்தான்.

    எனவே சகல சவுபாக்கியத்தை அள்ளித்தரும் கோ பூஜையை ஒவ்வொரு வரும் ஆண்டுக்கு ஒரு முறையாவது விதிப்படி செய்து வரவேண்டும்.

    முன்பு ஒவ்வொரு வீட்டிலும் பசுவினை வளர்த்து வந்தார்கள்.

    எனவே ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிலேயே கோபூஜை செய்தும் வந்தார்கள்.

    இன்றைய தினத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பசு வழிபாடு செய்ய இயலாது என்பதால் ஆலயங்களில் கோசாலை

    (பசுமடம்) அமைத்து, அன்றாடம் கோ பூஜை செய்யும் மரபு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஆலயத்தில் பசுமடம் இருப்பின் மக்கள் அனைவருமே பசு பராமரிப்பிலும், கோ பூஜையிலும் கலந்து கொள்ளலாம்.

    அன்றாடம் செய்ய இயலாதவர்கள் கூட வெள்ளிக்கிழமை கோபூஜை செய்ய வேண்டும்.

    வசதியுள்ளவர்கள் 108 பசுக்களைக் கொண்டு பெரிய அளவில் கோபூஜை செய்யலாம்.

    அவ்வாறு கோபூஜை செய்வது ஆலயத்திற்கும் மக்களுக்கும் மட்டுமின்றி அகிலத்திற்கே நன்மை அளிக்கும்.

    Next Story
    ×