search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சனிபகவான் அவதரித்த புரட்டாசி
    X

    சனிபகவான் அவதரித்த புரட்டாசி

    • சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
    • சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.

    இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.

    புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.

    அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடு பலன்கள் குறைய காக்கும் கடவுளான பெருமாளை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

    புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது.

    சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    புரட்டாசியில் பெருமாளை வழிபட்டால் ஏழுமலையானிடம் இருந்து அதிக அருளையும், பலனையும் பெற முடியும் என்பது பக்தர்களிடம் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

    குறிப்பாக புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் முதலில் திருப்பதி ஏழு மலையான் வழிபாடுதான் நினைவுக்கு வரும்.

    அதனால் தான் புரட்டாசி மாதத்தை "பெருமாள் மாதம்" என்று சொல்கிறார்கள்.

    புரட்டாசி மாதம் சனிக் கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது.

    புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது.

    எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    Next Story
    ×