search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பாவங்களை அகற்றும் பஞ்ச கவ்யம்
    X

    பாவங்களை அகற்றும் பஞ்ச கவ்யம்

    • பஞ்ச கவ்யம் என்பது தெய்வீக ஆற்றல் பொருந்திய மருந்தாகும்.
    • இப்போது பயிர்கள் செழித்து வளரவும், நோய் நீக்கியாகவும் பஞ்சகவ்யம் பயன்படுகின்றது.

    பசு மனிதர்க்கு தேவையற்ற புல்லையும் வைக்கோலையும் உண்டாலும் மனிதர்க்குத் தேவையான பால், நெய், வெண்ணெய், தயிர் ஆகியவற்றைத் தந்து காக்கிறது.

    பசுவின் சாணமும், சிறுநீரும் சுத்தி செய்யும் தன்மை வாய்ந்தன.

    பஞ்சகவ்யம் என்பது பசுவின் பால், தயிர், நெய், கோசலம் (கோமுத்திரம்), கோமயம் (கோமலம்) ஆகியவற்றின் சேர்க்கையே ஆகும்.

    பஞ்ச கவ்யம் என்பது தெய்வீக ஆற்றல் பொருந்திய மருந்தாகும்.

    உடலின் புறத்தே தூய்மை செய்வது நீர்.

    அகத்தே தூய்மை செய்வது பஞ்ச கவ்யம்.

    சில வழிபாட்டு சடங்குகளில் பஞ்சகவ்யம் முக்கிய இடத்தைத் பெறுகிறது.

    உதாரணமாக உபகர்மா அன்று பக்தர்கள் முதலில் நீராடி, பஞ்ச கவ்யத்தைப, பருகி மீண்டும் நீராடுகின்றனர்.

    பஞ்சகவ்யமானத அதை உண்போரின் உடல், தோல், மாமிசம், ரத்தம் மற்றும் எலும்பு வரையுள்ள பாவங்களை அக்னி விறகுக் கட்டையை எரிப்பது போல எரித்து விடுகிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    ஆயுர்வேதத்தில் பஞ்ச கவ்யத்தை பஞ்சகவ்வியக் கிருதம் என்பர்.

    கிருதம் என்றால் திரவ மருந்து, காக்காய் வலிப்பு முதலான சில நோய்களுக்கு இது ஓர் அரிய மருந்தாகும்.

    இப்போது பயிர்கள் செழித்து வளரவும், நோய் நீக்கியாகவும் பஞ்சகவ்யம் பயன்படுகின்றது.

    Next Story
    ×