search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பால் தயிர் நெய்
    X

    பால் தயிர் நெய்

    • பிற பாலிலிருந்து உருவாக்கப்படும் தயிர்களை விட பசுந்தயிர் நமக்கு மிக்க ஏற்புடையதாக உள்ளது.
    • வெண்ணெய் கலந்த தயிரனத்தை இறைவனுக்குப் படைத்து, தானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்..

    பசும் பாலின் பெருமையை நாம் அனைவருமே அறிவோம்.

    எளிதில் சீரணமாகுமம் பசுவின் பால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அரிய உணவாகப் பயன்படுத்திறது.

    அறிவை விருத்தி செய்கிறது.

    பசுவின் மடியில் ஏழு சமுத்திரங்கள் வாசம் செய்வதால், இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால், ஏழு சமுத்திரங்களாலும் அபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

    பசுவின் கன்று குடித்த பின், பசுவிடம் பாலைக் கறந்தால் அந்த பாலுக்குத் தீட்டு இல்லை என்பது சிவபுராணம் கூறும் செய்தியாகும்.

    இரவில் பூமியின் மீது பொழியும் சந்திரனின் கிரணம் என்னும் அமுதம் பூமியைக் குளிப்பது போல பசுவின் பாலமுதமும் பூமியைச் குளிர்விக்கிறது என்று கயிலாய முனிவர் அறிவுறுத்துகிறார்கள்.

    பிற பாலிலிருந்து உருவாக்கப்படும் தயிர்களை விட பசுந்தயிர் நமக்கு மிக்க ஏற்புடையதாக உள்ளது.

    பசுந்தயிர் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது, ஆற்றலைத் தருவதோடு சுக்கிலத்திற்கும் வீரியம் அளிப்பது.

    வெண்ணெய் கலந்த தயிரனத்தை இறைவனுக்குப் படைத்து, தானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்.

    இனி பசு நெய்யை நோக்கும் போது, மற்ற நெய்களைவிட கொழுப்புச் சத்து குறைவானது.

    பசு நெய்யினை எரிக்கும் போது ஏற்படும் புகை நம்மை பாதிக்காது.

    எனவே நெய் விளக்கேற்றும் போது பசு நெய்யே மிகவும் நல்லது,.

    பசு நெய் உணவின் சுவையை அதிகரிக்கும்.

    யாகங்கள், ஹோமங்கள் செய்யும் போது தீயினை வளர்க்க நெய்தான் வார்க்க வேண்டும்.

    நெய்யில் எரியும் அக்னியே, நம் ஆகுதிகளை தெய்வங்களிடம் கொண்டு சேர்க்கும் என்பது ஐதீகம்.

    Next Story
    ×