என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்க வேண்டிய அன்பு தெய்வம் பசு
    X

    ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்க வேண்டிய அன்பு தெய்வம் பசு

    • பசு வளர்ப்பது பூர்வ ஜென்மப் புண்ணியமாகும்.
    • தீராத நோய் நொடிகளுக்கு பசுஞ்சாணத் திருநீறு மருந்தாகும்.

    பசு வளர்ப்பது பூர்வ ஜென்மப் புண்ணியமாகும்.

    திருமந்திரத்தில் இறைவனுக்கு ஒருபச்சிலை சாற்றுவது, உண்ணும் உணவில் ஒருபிடி உணவு தானம் செய்வது,

    பசுமாட்டுக்கு ஒரு பிடி புல் கொடுப்பது, பிறரிடம் இனிமையாக பேசுவது ஆகிய நான்கும் தர்மமாக கூறப்பட்டுள்ளது.

    பசுவிற்கு ஒரு பிடி புல் கொடுப்பதே தர்மம் என்றால் அந்த பசுவை வளர்த்துப் பேணி காப்பது எந்த அளவிற்கு புண்ணியத்தை கொடுக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

    குழந்தை இல்லாதவர்கள் பசு வளர்த்து சேவை செய்தால் உடனடியாக குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    தீராத நோய் நொடிகளுக்கு பசுஞ்சாணத் திருநீறு மருந்தாகும்.

    குடும்பப் பீடை உள்ள இடங்களில் புண்ணிய அர்ச்சனை செய்து பசுமாட்டை உள்ளே வரவழைத்து பூஜை செய்தால் தோஷங்கள் விலகும்.

    திருமணமாகாதவர்கள் பசுவை வெள்ளிக்கிழமை தோறும் மூன்று முறை வலம் வந்து வழிபாடு செய்தால் தோஷம் விலகித் திருமணமாகும்.

    நோயாளிகள் ஒரே பசுமாட்டின் பாலை தண்ணீர் கலக்காமல் அருந்தினால் நோய் நீங்கும்.

    இறைவன் உமையம்மையோடு பிரதோஷக் காலத்தில் காளை வாகனத்தில் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார்.

    அப்போது வழிபட்டால் எல்லா குறைகளும் நீங்கும்.

    மாடு மங்காத செல்வம் பெற்றது.

    ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்க வேண்டிய அன்புத் தெய்வம் பசு.

    பசுக்களை வளர்த்து மண்வளம் பெருக்குவோம். கோமாதா வழிபாடு செய்து சகல பாக்கியங்களையும் பெறுவோம்.

    Next Story
    ×