search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நக்கீரரின் திருமுருகாற்றுப்படை
    X

    நக்கீரரின் திருமுருகாற்றுப்படை

    • போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் “படைவீடு’ எனப்படும்.
    • இவற்றுள் முதல் பகுதியில் திருப்பரங்குன்றம் தலத்தின் மகிமை பற்றி கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது.

    போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு' எனப்படும்.

    அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்ய சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும்.

    ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, "ஆறுபடை வீடு' என்கிறோம்.

    வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒருவர், வள்ளல்கள் இருக்குமிடத்தை சுட்டிக்காட்டி,

    அங்கு சென்றால் அவரது வறுமை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவார்.

    இந்த வகையில் அமைந்த நூல்கள் சங்க காலத்தில், "ஆற்றுப்படை' எனப்பட்டது.

    இவ்வாறு மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் முருகன் இந்த ஆறு இடங்களில் உறைகிறார்.

    அவரிடம் சென்று சரணடைந்தால் அவரது அருள் கிடைக்கும் என்ற பொருளில் நக்கீரர் ஒரு நூல் இயற்றினார்.

    முருகனின் பெருமைகளைச் சொல்லும் நூல் என்பதால் இது, "திருமுருகாற்றுப்படை' (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது.

    பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, "ஆறுபடை' என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது.

    பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை.

    இதுகடைச்சங்க நூல்களில் ஒன்று என்பது மரபுவழி செய்தியாகும்.

    இது பிற்காலத்தில் எழுந்த நூல் என்று கருதுவாரும் உண்டு;

    எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் இது சங்கநூல் என்கிறார்கள்.

    முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது.

    "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்று பொருள்படும்.

    "முருகாற்றுப்படை" எனும்போது, முக்தி பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை முக்தி பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும்.

    திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகளை தனித்தனியாக கூறியுள்ளது.

    அறுபடை வீடுகளுக்கு சென்று முருகனை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற அரிய ரகசியம் தொகுக்கப்பட்டுள்ளது.

    மேலும் அறுபடை வீடுகளும் மனிதன் யோக சாஸ்திரத்துடன் எப்படி ஒருங்கிணைந்துள்ளது என்பதை காட்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது.

    இவற்றுள் முதல் பகுதியில் திருப்பரங்குன்றம் தலத்தின் மகிமை பற்றி கூறப்பட்டுள்ளது.

    இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் மூன்றாம் பகுதியில் பழனி, நான்காம் பகுதியில் சுவாமிமலை,

    ஐந்தாம் பகுதியில் திருத்தணி, ஆறாம் பகுதியில் பழமுதிர்சோலை ஆகிய படை வீடுகள் பற்றி கூறப்பட்டுள்ளன.

    Next Story
    ×