search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மாங்கல்ய பலம் தரும் திருவிளக்கு!
    X

    மாங்கல்ய பலம் தரும் திருவிளக்கு!

    • “நிம்பதீபம்” என்பது இலுப்பை எண்ணெய் விளக்கு ஆகும்.
    • மாரியம்மன் திருவருள் பெற இந்த விளக்கை முறைப்படி ஏற்ற வேண்டும்.

    சுமங்கலிப் பெண்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை தினசரி குளித்த பின்பு,

    திருவிளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து பயபக்தியுடன் ஒன்பது முறை வணங்கி வழிபட,

    வீட்டில் அஷ்டலட்சுமி வாசம் செய்வதோடு, மாங்கல்யம் பலம் பெற்று

    கணவன் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வசதியாக வாழ்வீர்கள்.

    நிம்ப தீபம்!

    "நிம்பதீபம்" என்பது இலுப்பை எண்ணெய் விளக்கு ஆகும்.

    இதைப் பேய்கள் அகலுவதற்காக ஏற்றுவதுண்டு.

    மாரியம்மன் திருவருள் பெற இந்த விளக்கை முறைப்படி ஏற்ற வேண்டும்.

    சங்கல்பப்படி, மடி, ஆசாரத்துடன் மாரியம்மன் சன்னதியில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

    இதைப் புதுஅகண்டம், அகல் இவைகளில் ஏற்ற வேண்டும். வீடுகளிலும் இத்தீபத்தை ஏற்றலாம்.

    பஞ்ச தீப எண்ணெய்

    தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய் மற்றும் பசு நெய் கலந்த எண்ணெய்யே பஞ்ச தீப எண்ணெய் எனப்படும்.

    Next Story
    ×