search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தெய்வ வழிபாட்டில் பஞ்சகவ்யம்
    X

    தெய்வ வழிபாட்டில் பஞ்சகவ்யம்

    • பசுவும் பஞ்ச கவ்யமும் தெய்வீகத்தன்மை வாய்ந்தது.
    • பஞ்ச கவ்யத்தின் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு தெய்வங்கள் வாசம் செய்கின்றன.

    பசுவும் பஞ்ச கவ்யமும் தெய்வீகத்தன்மை வாய்ந்தது.

    எனவே தெய்வ வழிபாட்டில் பஞ்சகவ்யத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

    பஞ்ச கவ்யத்தைப் பெறுவதற்காகவே ஆலயங்களில் கோசாலைகள் அமைக்கப்பெற்று பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.

    முற்காலத்தில் மன்னர்களும் செல்வந்தர்களும் ஆலயங்களுக்கு பசுக்களைத் தானம் கொடுத்த காரணமும் இதுவே., இச்செய்திகள் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.

    தானம் அளிக்கப்பட்ட பசுக்கள் வாழையடி வாழையாய் பெருகி வளர்வதால் இவற்றை முசா சாவாப் பசுக்கள் அதாவது முப்படையாத சாவாத பசுக்கள் என்று கல்வெட்டுகள், குறிப்பிடுகின்றன.

    பஞ்ச கவ்யத்தின் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு தெய்வங்கள் வாசம் செய்கின்றன.

    பசுவின் பாலில் சந்திரனும், பசுவின் தயிரில் வாயு பகவானும் நெய்யில் சூரிய பகவானும், கோசலத்தில் (கோமியம்) வருணதேவனும், பசும் சாண்ததில் அக்னி தேவனும் வாசம் செய்கின்றனர்.

    Next Story
    ×