search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தேவ பசுவின் சொரூபமாக விளங்கிய அன்னை புவனேஷ்வரி
    X

    தேவ பசுவின் சொரூபமாக விளங்கிய அன்னை புவனேஷ்வரி

    • இயன்றவர்கள் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கூட கோபூஜையை செய்து வரலாம்.
    • பொதுவாக பசு வழிபாட்டினை இருவகையாக செய்யும் மரபு உண்டு.

    லோகநாயகியான அன்னை புவனேஸ்வரி இப்பூலோகத்தில் வசிஷ்டர் ஆசிரமத்தில் தேவ பசுவாக இருந்த

    நந்தினியின் சொரூபமாக விளங்குகிறாள் என்று தேவி புராணங்கள் கூறுகின்றன.

    பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜ சக்ரவர்த்தி, தசரதச் சக்ரவர்த்தி போன்ற ராஜாதி ராஜாக்கள் எல்லோரும் பூசிக்கொண்டார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி (தை மாதம் முதல் தேதி) இந்திர பூஜையுடன் சேர்த்து கோபூஜையை செய்து வருவது வழக்கம்.

    இயன்றவர்கள் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கூட கோபூஜையை செய்து வரலாம்.

    பொதுவாக பசு வழிபாட்டினை இருவகையாக செய்யும் மரபு உண்டு.

    பசுமாடுகளை சந்தனம், குங்குமம் போன்றவற்றால் அலங்கரித்து எல்லா மந்திரங்களும் கூறி,

    மலர்களால் அர்ச்சித்து தூப, தீப நிவேதனங்களால் வழிபடுவது ஒருமுறையாகும்.

    இவ்வாறு வழிபட இயலாதவர்கள் கோமாதாவின் படத்தை மட்டும் வைத்து வழிபடுவதும் உண்டு.

    இதைத்தவிர பசுவை வீட்டிலோ, ஆலயத்திலோ நேரடியாக வழிபடுவது மற்றொரு முறையாகும்.

    Next Story
    ×