search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தோஷங்கள் நீக்கும் ஆழத்து பிள்ளையார்
    X

    தோஷங்கள் நீக்கும் ஆழத்து பிள்ளையார்

    • 21 பிறவி தோஷங்களை நீக்குகிறார்.
    • சங்கடகர சதுர்த்தி அன்று இவரை வேண்டி வணங்கினால் எல்லா சங்கடங்களும் நீங்கும்.

    விருத்தாசலத்தில் பழமலைநாதர் கோவிலின் உள்ளே ஆழத்து விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயில் இருக்கும் ஆழத்து விநாயகர் தரைமட்டத்தில் இருந்து கீழே பள்ளத்தில் இருப்பதால் ஆழத்து விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார்.

    விருத்தாசலத்தில் உள்ள ஆழத்து விநாயகர் மிகவும் சக்திவாய்ந்தவர். பிரம்மாவுக்கு அறிவு புகுத்தியவர் இந்த ஆழத்து விநாயகர் என்று கூறப்படுகிறது. பிரம்மா விருத்தாசலத்தில் மலையை உருவாக்க எண்ணினார். அங்கு சிவபெருமான் பழமலையாக காட்சி அளித்தார். ஆகையால் பிரம்மா சிவனே மலையாக இருக்கிறார் என்று சென்றுவிட்டார்.

    இங்கு உள்ள ஆழத்து விநாயகர், திருமணதடை நீக்குகிறார், குழந்தை பாக்கியம் தருகின்றார், சிறந்த கல்வி வழங்குகின்றார், 21 பிறவி தோஷங்களை நீக்குகிறார்.

    ஜாதகம் இல்லாதவர்கள் இங்கு வேண்டி வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்க பெறுகின்றனர். சங்கடகர சதுர்த்தி அன்று இவரை வேண்டி வணங்கினால் எல்லா சங்கடங்களும் நீங்கும்.

    சென்னை, டெல்லி, சேலம், கேரளா போன்ற இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து 108, 27, சிதறு தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.

    Next Story
    ×