search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் தேர் திருவிழா
    X

    திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் தேர் திருவிழா

    • பங்குனி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
    • வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு கொடியேற்றப்படும்.

    கொடியேற்றத்துடன் தொடங்கியதுதிருப்பட்டூரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில் மிகவும் பழமையானது. இது இந்து அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது.

    இதையட்டி கொடி மரத்துக்கு அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு கொடியேற்றப்படும்.

    விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சோமாஸ்கந்தர், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலா நடைபெறுகிறது. திருவிழாவின் இரண்டாம் நாள் சுவாமி பல்லக்கில் புறப்பாடு நடைபெறுகிறது.

    இரவு சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் மயில் வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறுகிறது. திருவிழாவின் அடுத்தடுத்த நாட்களில் சுவாமி கைலாச வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும், சுவாமி சேஷ வாகனத்திலும், அம்பாள் மயில் வாகனத்திலும், சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்ப பல்லக்கிலும், சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும், சுவாமி குதிரை வாகனத்திலும் புறப்பட்டு திருவீதி உலா நடைபெறும். ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது.

    Next Story
    ×