search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பதஞ்சலி ஜீவசமாதி
    X

    பதஞ்சலி ஜீவசமாதி

    • முக்தி அடைந்த 10 தலங்களில் இத்தலமும் ஒன்று.
    • பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார்.

    ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் தமிழ்நாட்டில் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு. அவரே ஆதி சேஷன் ஆவார்.

    அவர் முக்தி அடைந்த 10 தலங்கள் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது.

    அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார்.

    வேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார். அதற்கேற்றவாறு இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்மநாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில்.

    திருப்பட்டுரிலே காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சி கோவிலில் வியாக்ர பாதர் ஜீவசமாதி இருக்கிறது. சிவபெருமான் பேரருளால் வியாக்ரபாதர் காலால் அடித்து கொண்டு வரப்பட்ட கங்கை குளம் இன்றும் புலி கால்களை போல் காட்சி அளிக்கிறது. காசி சென்று கங்கையில் நீராட முடியவில்லையே என்ற குறையை இத்தீர்த்தம் தீர்க்கிறது.

    எல்லாமே மஞ்சள் நிறம்

    பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர்.

    பிரம்மன் வழிபட்ட பழமலை நாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூக நாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாச நாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர்.

    எனவே இத்தலத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் மஞ்சள் நிறமே காட்சியளிக்கிறது. அது நம்மனதுக்கு மங்களமான மன உணர்வை ஏற்படுத்துகிறது.

    பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம்.

    யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் அதன் மூலம் ஆயுளை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம்.

    அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது.

    உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிக ளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும். அவை பிரம்மனின் அருளால் சுபசெலவுகளாக மாறிவிடும். பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர் நிலைக்குச் செல்வான். அதற்காக நாம் மனசாட்சி இல்லாமல் கேட்கும் உதவிகளை பிரம்மன் செய்ய மாட்டார்.

    நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை மீறி நியாயமற்றதை நாம் பிரம்மனிடம் கேட்டால் அவர் நமது நிலையை மோசமாக்கி விடுவார்.

    நரசிம்மர் மண்டபம்

    நரசிம் மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது, இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்கா ததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப் பட்டுள்ளன.

    நாத மண்டபத்தில் ராவணன், அகந்தையினால் மேருமலையை சிவ, பார்வதி யுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்த தாகவும் கூறப்படுகிறது.

    வேண்டுதல்-வழிபாடுகள்

    இத்தலம் ஒரு சிவதலமாக இருந்தாலும், இங்குள்ள பிரம்மா சந்நிதி தான் மிகவும் புகழ் பெற்றது. இத்தலம் குரு பரிகாரத்தலமாகும். மூலவருக்கு வடபுறத்தில் தனி சன்னதியில் ஆறடி உயரத்தில் தியான நிலையில் தாமரை மீது பத்மாசனக் கோலத்தில் அமர்ந்த நிலை யில் உள்ளார். மேலும் அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் அருள் பாலிக்கிறார் பிரம்மா.

    இந்தியாவிலேயே மிகப்பெரிய பிரம்மா இவர்தான். குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியா ழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது.

    மேலும், திங்கட்கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்கு வது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாக பூஜை நடக்கும்.

    குழந்தைகளுக்கான பைரவர் வழிபாடு

    சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர்.

    அர்த்த ஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியை பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.

    Next Story
    ×