search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நரசிங்கம்பேட்டை நரசிம்மர்
    X

    நரசிங்கம்பேட்டை நரசிம்மர்

    • விஸ்தாரமான கருவறையில் நரசிம்மப் பெருமாள் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.
    • நரசிம்மர் தவம் செய்து பிரம்மஹத்தி தோஷம் நீக்கிக் கொண்டதால் இது சிறந்த பரிகாரத் தலமாக உள்ளது.

    காவிரிக்கு தென் கரையில் உள்ள நரசிங்கம்பேட்டையில் நரசிம்மர், யோக நரசிம்மராக அமர்ந்து அருள்பாலிக்கிறார். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட இக்கோவில், விஜயநகர பேரரசால் சீரமைக்கப்பட்ட தலம். விஸ்தாரமான கருவறையில் நரசிம்மப் பெருமாள் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.

    சங்கு சக்கரம் இரண்டு கைகளில் உள்ளன. மற்ற இரு கைகள் யோக முத்திரையைக் காட்டுகின்றன. பெருமான் சாந்த சொரூபியாக அடியார்களின் துயர் தீர்க்கும் காருண்ய மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.இரண்ய வதத்துக்குப் பிறகு நரசிம்மரை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.

    அதைப் போக்க இத்தலத்தில் உள்ள சுயம்புநாத சுவாமி உதவினார். நரசிம்மர் தவம் செய்து பிரம்மஹத்தி தோஷம் நீக்கிக் கொண்டதால் இது சிறந்த பரிகாரத் தலமாக உள்ளது.

    Next Story
    ×