search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நாகவழிபாடு தலங்கள்
    X

    நாகவழிபாடு தலங்கள்

    • ஒரு சன்னதியில் புற்றிடங் கொண்ட பெருமானாக 'வன்மீகநாதர்' வீற்றிருக்கிறார்.
    • லிங்க வடிவில் காட்சியளிக்கும் இறைவன் இங்கு புற்றிற்குள் மறைந்திருக்கிறான்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் தலத்திற்கு 'ஆதிபுரி' என்று பெயர். இங்குள்ள ஆதி புரிக் கோவிலில் உள்ள லிங்கம் புற்று வடிவமாகக் காட்சி அளிக்கிறது. சிவலிங்கத் திருமேனி சதுர வடிவில் அமைந்துள்ளது. இத்திருமேனியை படம் பக்கநாதர் என்று அழைக்கிறார்கள். ஆதி புரீஸ்வரர் என்றும் இவரை அழைக்கிறார்கள். இங்குள்ள அம்மன் வடிவுடை நாயகியைத் தரிசிப்பதால் நாகதோஷம் விலகும் என்று நம்புகிறார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் தரம் தோன்றி சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இங்குள்ள ஒரு சன்னதியில் புற்றிடங் கொண்ட பெருமானாக 'வன்மீகநாதர்' வீற்றிருக்கிறார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன் கோவிலின் வடமேற்கில் புற்றுலிங்கம் உள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசனுக்கு வன்மீக நாதர் என்று பெயர். லிங்க வடிவில் காட்சியளிக்கும் இறைவன் இங்கு புற்றிற்குள் மறைந்திருக்கிறான்.

    மண்டைக்காடு:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலின் மூலஸ்தானமே புற்று வடிவில் உள்ளது. இந்தப் புற்று மிகவும் பெரியதாகக் காட்சியளிக்கிறது. இதன் உயரம் ஐம்பத்தாறு அடியாகும். ஐந்து முகங்களை உடையதாக உள்ளது. இந்தப் புற்று ஆண்டு தோறும் வளர்ந்து வருவதாகக் கூறுகிறார்கள்.

    Next Story
    ×