search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் சிறப்பான அன்னதானம்
    X

    காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் சிறப்பான அன்னதானம்

    • முருகனுக்குத்தான் ‘அரோகரா’ போட்டப்படி காவடி எடுத்துச் செல்வார்கள்.
    • தமிழ்நாட்டில் முருக பக்தர்கள் எடுக்கும் காவடிக்கு தனி சிறப்பு உண்டு.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்கப்படுகிறது. மிக, மிக நேர்த்தியாக நடத்தப்படும் இந்த அன்னதான நிகழ்வைப் பார்க்க பிரமிப்பமாக இருக்கும்.

    காணிப்பாக்கம் விநாயகர் ஆலயத்திலும் அதுபோன்ற அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டது. முதன் முதலாக இத்தலத்தில் 1991-ம் ஆண்டு அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது.

    முதலில் 150 பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்கப்பட்டது. பிறகு அது 500 ஆக உயர்ந்தது. தற்போது தினமும் ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் பெற்று வருகிறார்கள்.

    அன்னதான திட்டத்துக்கு பக்தர்கள் இயன்ற அளவு உதவி செய்யலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் ரூ. 1116 வழங்கினால் அவர் பெயரில் ஒருநாள் அன்னதானம் வழங்கப்படும்.

    அன்னதான திட்டத்துக்கு வழங்கப்படும் தொகைக்கு வருமான வரி சட்டம் 80(ஜி) பிரிவின் கீழ் விலக்கு பெறலாம்.

    முருகனுக்குத்தான் 'அரோகரா' போட்டப்படி காவடி எடுத்துச் செல்வார்கள். தமிழ்நாட்டில் முருக பக்தர்கள் எடுக்கும் காவடிக்கு தனி சிறப்பு உண்டு.

    ஆனால் காணிப்பாக்கம் பகுதி மக்கள் சுயம்பு விநாயகருக்கு காவடி எடுக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பக்தர்கள் காவடி எடுத்து வந்து விநாயகரிடம் சமர்ப்பிப்பார்கள்.

    திருமணம் திட்டமிட்டபடி நடந்தால், குழந்தை பிறந்தால் காவடி எடுத்து வருவதாக விநாயகரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அவர்கள் காவடி எடுத்து வருகிறார்கள்.

    கார்த்திகை மாதம் வந்து விட்டால், எங்கு பார்த்தாலும் சபரிமலை ஐய்யப்பனுக்கான சரண கோஷம் எழுவதை கேட்கலாம். ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து, காவி வேட்டி உடுத்தி, விரதம் இருந்து பயபக்தியுடன் சபரிமலை யாத்திரையை மேற்கொள்வார்கள்.

    பக்தர்கள் இருமுடி கட்டி, சரண கோஷம் போட்டபடி செல்வதை ஐய்யப்பனுக்கு மட்டுமே உரிய தனித்துவமான ஒரு வழிபாடாகவே இதுவரை நினைத்திருந்தோம். தற்போது அச்சு அசல் அதே மாதிரியான ஒருவழிபாடு காணிப்பாக்கம் சுயம்பு விநாயகரை மையமாக வைத்து ஆந்திரா மாநிலம் முழுவதிலும் ஓசையின்றி நடந்து வருகிறது.

    ஆம், காணிப்பாக்கம் விநாயகரையும் ஆந்திர மாநில மக்கள் இருமுடி கட்டி நடந்து வந்து வணங்கி செல்கிறார்கள். இந்த வழிபாடு அப்படியே ஐய்யப்ப பக்தர்கள் வழிபாடு முறைகள் போலவே உள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் மாலை அணிவார்கள். குருசாமி மூலம் அணிவிக்கப்படும் இந்த மாலைக்கு "கணபதி தீட்ச மாலை" என்று பெயர்.

    இந்த மாலை துளசி மாலை அல்லது ஸ்படிக மாலையாக இருக்கும். கணபதி தீட்ச மாலை அணிந்த நாள் முதல் 41 நாட்களுக்கு ஒரு மண்டலமாக விரதம் மேற்கொள்வார்கள்.

    இந்த விரத நாட்களில் தரையில் தான் படுத்து தூங்குவார்கள். செருப்பு அணிய மாட்டார்கள். மது, பீடி, சிகரெட் எதுவும் பயன்படுத்த மாட்டார்கள்.

    தினமும் காலை, மாலை இரு நேரமும் குளித்து காணிப்பாக்கம் விநாயகர் படம் அலங்கரித்து வைத்து சரணம் சொல்வார்கள். ஐய்யப்ப பக்தர்கள் எப்படி குழு, குழுவாக அமர்ந்து பக்தி பாடல்களை பாடுகிறார்களோ அதேமாதிரி பாடுவார்கள்.

    பிறகு விநாயகர் சதுர்த்தி சமயத்தில் காணிப்பாக்கத்தை சென்று சேரும் வகையில் பக்தர்கள் தங்கள் ஊர்களில் இருந்து நடைபயணத்தை தொடங்குவார்கள். சில ஊர்களில் 21 நாட்கள், அல்லது 11 நாட்கள் மட்டும் விரதம் இருந்தும் பயணத்தை தொடங்குவது உண்டு.

    பயணத்தின் தொடக்கமாக ஐய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டுவதை போலவே விநாயக பக்தர்களும் இருமுடி கட்டி தலையில் சுமப்பார்கள். ஐய்யப்ப பக்தர்கள் தங்கள் இருமுடி கட்டில் நெய் தேங்காய் வைத்திருப்பார்கள். விநாயக பக்தர்கள் தேன் தேங்காயை எடுத்துச் செல்கிறார்கள்.

    ஐய்யப்ப பக்தர்கள் எப்படி "சாமியே ஐய்யப்பா, ஐய்யப்பா சாமியே'' என்று சொல்வது போல இவர்கள் "சாமியே விநாயகா, விநாயகா சாமியே' என்று சரணம் சொல்லி செல்கிறார்கள்.

    ஐய்யப்ப பக்தர்கள் காவி அல்லது நீலநிற உடை அணிந்திருப்பார்கள். ஆனால் காணிப்பாக்கம் விநாயக பக்தர்கள் அத்தகைய உடைகளை அணிவதில்லை. தூய்மையான வெள்ளைநிற உடைகளையே அணிந்து நடந்து வருவார்கள்.

    காணிப்பாக்கம் கோவிலை வந்து சேர்ந்ததும் இருமுடியை சுயம்பு விநாயகருக்கு செலுத்துவார்கள். இருமுடியில் எடுத்து வரும் தேன் உள்ளிட்ட சில பொருட்களை கணபதி ஹோமம் செய்யும்போது அதில் சேர்ந்து விடுவார்கள். இதன் மூலம், தங்களது பிரார்த்தனைகளை சுயம்பு விநாயகர் எந்த இடையூறும் இல்லாமல் நிறைவேற்றுவார் என்று நம்புகிறார்கள்.

    இதனால் காணிப்பாக்கம் விநாயகருக்கு இருமுடி கட்டி விரதம் இருந்து செல்லும் புதிய வழிபாடு முறை ஆந்திரா முழுவதும் புகழ்பெற்று வருகிறது. தெலுங்கானா பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இருமுடி கட்டி, நடந்து வந்து பிரார்த்தித்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த புதிய வழிபாட்டு முறையை முதன் முதலாக கடந்த 2005-ம் ஆண்டு கோவில் அதிகாரி கேசவலு தொடங்கி வைத்தார். அவர் ஒரு மண்டலம் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து சுயம்பு விநாயகரை வழிபட்டார்.

    அதன்பிறகு சுயம்பு விநாயகரை இருமுடி கட்டி வந்து வணங்கும் பழக்கம் பரவியது. கடந்த ஆண்டு சுமார் 1 லட்சம் பக்தர்கள் இருமுடி கட்டி காணிப்பாக்கம் வந்தனர். இந்த ஆண்டு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் பலமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×