search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    காணிப்பாக்கம் விநாயகர்
    X

    காணிப்பாக்கம் விநாயகர்

    • இந்தியாவில் புகழ்பெற்ற விநாயகர் கோவிலாக மும்பையில் உள்ள சித்தி விநாயகர் ஆலயம் திகழ்கிறது.
    • இந்தியாவில் உள்ள 99 சதவீத விநாயகர் தலங்களுக்கு எந்த வரலாற்று பின்புலமும் இல்லை.

    'கணபதி பூஜை கை மேல் பலன்' என்பது நம் முன்னேர்கள் வாக்கு. இன்று கணபதி வழிபாடு அங்கு, இங்கு என்றில்லாதபடி எங்கும் நிறைந்துள்ளது.

    எந்த ஒரு ஆலயமாக இருந்தாலும், சன்னதிகளில் தவறாமல் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடத்தப்படுகிறது. சங்கடங்களை தீர்ப்பவர் என்பதால் மக்கள் சதுர்த்தி நாளில் விநாயகரை மகிழ்விக்கவும், பூஜிக்கவும் தவறுவதே இல்லை.

    அதுவும் மூல மூர்த்தியாக விநாயகர் உறைந்திருக்கும் தலம் என்றால் கேட்கவே வேண்டாம். விநாயகர் நம் வெளகீக வாழ்க்கை இடையூறுகளை எல்லாம் களைந்து, மற்றவர்களும் பயன் பெறும் சுகபோகங்களையும், அஷ்ட ஐஸ்வரியங்களையும், நமக்கு அள்ளி, அள்ளி தருவார் என்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    அந்த வகையில் இந்தியாவில் புகழ்பெற்ற விநாயகர் கோவிலாக மும்பையில் உள்ள சித்தி விநாயகர் ஆலயம் திகழ்கிறது. ஆண்டுக்கு பல நூறு கோடி ரூபாயை பக்தர்கள் வாரி வழங்கும் இந்த ஆலயம் மராட்டியர்களுக்கு மட்டுமின்றி இந்தியர்களுக்கே இஷ்ட தெய்வமாக உள்ளது.

    அந்த சித்தி விநாயகருக்கு இணையாக தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர்.

    காணிப்பாக்கம் என்ற ஊர் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருளாதாலுகாவில் உள்ளது. சிறிய ஊர்தான் ஆனால் அங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கும் வரசித்தி விநாயகரின் கீர்த்தி எல்லையற்றது.

    இந்தியாவில் உள்ள 99 சதவீத விநாயகர் தலங்களுக்கு எந்த வரலாற்று பின்புலமும் இல்லை. ஒரு அறை கட்டி ஒரு விநாயகர் சிலையை வைத்தால்கூட, அது ஆலயமாகிவிடும்.

    பொதுவாக விநாயகர் சிலையை தூரத்து ஊர்களில் இருந்து திருடி எடுத்து வந்து வைத்தால் அவர் அதிகசக்தி உடையவராக நன்மைகள் தருவார் என்ற ஒரு கருத்து மக்களிடம் எப்படியோ பரவி விட்டது. எனவே ஒரு ஊரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர், இன்னொரு ஊரில் அருள் வழங்கிக்கொண்டிருப்பதை காணமுடியும்.

    ஆனால் காணிப்பாக்கம் விநாயகர் அத்தகைய நிலை பெற்றவர் அல்ல. அவர் தன்னைத்தானே காணிப்பாக்கம் பூமியில் இருந்து வெளிப்படுத்திக் கொண்டவர்.

    அதாவது சுயம்புவாக தோன்றியவர். விநாயகப்பெருமான், தன்னை சுயம்பு வடிவில் வெளிப்படுத்திக்கொண்ட பல தலங்களில் தனித்துவங்களுடன் இருப்பது இத்தலத்தில் மட்டும்தான் எனவேதான் காணிப்பாக்கம் விநாயகர் ஈடு இணையற்றவராகத் திகழ்கிறார்.

    ஒரு இடத்தில் ஒரு கடவுள் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தினால், அந்த இடத்து ஆலயம் பக்தர்களை ஈர்த்து, அருள்பாலித்து பக்தர்கள் கேட்கும் வரம்களை எல்லாம் நிறைவேற்றும் புனித தலமாக திகழும். தமிழ்நாட்டில் உள்ள எத்தனையோ சுயம்பு தலங்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும்.

    காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகர் மிக, மிக எளிமையானவர். ஆனால் தன்னை தேடி, நாடி வரும் பக்தர்களை எளிமையில் இருந்து சகல யோகங்களையும் கொடுத்து அனுபவிக்க வைத்து, இந்த ஜென்ம பிறவியை நிறைவாக மாற்றும் அற்புத ஆற்றல்கள் கொண்டவர்.

    காணிப்பாக்கம் விநாயகரை வழிபட, வழிபட அவர் நம்மை மேம்படுத்துவார். ஆந்திரா மாநில மக்கள் மத்தியில் இன்று காணிப்பாக்கம் விநாயகர் பெரும் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்.

    தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காணிப்பாக்கம் வந்து சுயம்பு வடிவ விநாயகரை வழிபட்டு, மெய் சிலிர்க்க, மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கிறார்கள்.

    திருப்பதி ஏழுமலையான் எப்படி பொறிவைத்து பிடித்து பக்தர்களைதன் வசமாக்கி, அவர்களது ஆன்மாவை சுத்தப்படுத்தி, பக்குவப்படுத்துகிறாரோ, அப்படி காணிப்பாக்கம் சுயம்பு விநாயகரும் பக்தர்களை ஈர்த்து அருள்பாலித்து, அவர்கள் வாழ்க்கை விக்னங்களை எல்லாம் துடைத்தொறிந்து வருகிறார்.

    இந்த சக்தி வாய்ந்த கோவிலை ஆந்திர மாநில அரசின் இந்து அறநிலையத்துறை பராமரித்து வருகிறது. பக்தர்களுக்கு தேவையான எல்லா வசதிகளும் இங்கு செய்யப்படுள்ளன.

    காணிப்பாக்கம் சென்று வந்தால் கவலைகள் தீரும் என்பது நிதர்சனமான உண்மை. அதனால்தான் ஆந்திர மாநில எல்லையையும் தாண்டி, காணிப்பாக்கம் சுயம்பு விநாயகரின் அருள்புகழ் நாலாபுறமும் பரவிக்கொண்டிருக்கிறது.

    இப்போது இந்த ஆலயத்தின் தல வரலாறை அறிய வேண்டும் என்ற ஆவல் உங்கள் மனதில் ஏற்பட்டு இருக்குமே....

    Next Story
    ×