search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை 2018- ஆஸ்திரேலியா- டென்மார்க் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது
    X

    உலகக்கோப்பை 2018- ஆஸ்திரேலியா- டென்மார்க் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது

    உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - டென்மார்க் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இதில் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா - டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. டென்மார்க் அணியின் எரிக்சன் கோல் அடித்து அசத்தினார். இதனால் தொடக்கத்திலேயே டென்மார்க் 1-0 என முன்னிலைப் பெற்றது.

    ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா வீரர் லெக்கி ரோஸ் தலையால் அடித்த பந்தை டென்மார்க் வீரர் யூசுப் பவுல்சன் தடுக்க முயன்றபோது பந்து கையில் பட்டது. நடுவர் VAR உதவியுடன் பெனால்டி வாய்ப்பு கொடுத்தார்.



    இதை பயன்படுத்தி 38-வது நிமிடத்தில் ஜெடினாக் கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை அடைந்தது. அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

    ‘சி’ பிரிவில் டென்மார்க் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் 1 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது. 8.30 மணிக்கும் தொடங்கும் ஆட்டத்தில் பிரான்ஸ் பெரு அணியை எதிர்கொள்கிறது.
    Next Story
    ×