search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதுகுளத்தூர் அருகே கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு 8 ஆண்டு சிறை
    X

    முதுகுளத்தூர் அருகே கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு 8 ஆண்டு சிறை

    முதுகுளத்தூர் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில், இருவருக்கு 8 ஆண்டு சிறை தண்டணையும், தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூர் அருகேயுள்ள வீரம்பலை சேர்ந்த விவசாயி கோவில் பிள்ளை (வயது 45). இவரை முன்விரோதத்தால், அதே ஊரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் குமார் (39), எபினேசர் மகன் சத்தியசீலன் (40), யோபு ஆகியோர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக, 2012-ல், இளஞ்செம்பூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு, முதுகுளத்தூர் சப்-கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு வக்கீல் அழகர்சாமி ஆஜராகி, வாதாடினார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடே‌ஷன் குற்றச்சாட்டப்பட்ட குமார், சத்தியசீலன் ஆகிய இருவருக்கும் 8 ஆண்டு சிறை தண்டனையும், தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மூன்றாவது குற்றவாளி யோபுவை விடுதலை செய்தார்.

    தண்டணைக்குள்ளான இரு குற்றவாளிகளையும், கடலாடி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.

    Next Story
    ×