search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1000 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
    X

    ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1000 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

    தமிழகத்தில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். #108Ambulance #MinisterVijayabaskar
    புதுக்கோட்டை:

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க ஆயிரம் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை விரைவில் 1000 ஆக  உயர்த்தப்படும். இதன்மூலம் விபத்து நடந்த இடங்களுக்கு ஆம்புலன்ஸ் விரைவில் செல்ல முடியும். கிராமங்களிலும் விரைவில் ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்படும்.



    விபத்து அதிகம் நடக்கும் பகுதிகளில் விபத்துக்காய நிலைக்குழு மையம் ஏற்படுத்தப்படும். அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் விபத்துக்காய சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #108Ambulance #MinisterVijayabaskar

    Next Story
    ×