search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அருமையான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு
    X

    அருமையான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு

    சூடான சாதத்தில் கருவாட்டு குழம்பை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று வாளைக்கருவாட்டுடன் மொச்சை, முருங்கைக்காய் சேர்த்து குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாளை கருவாடு - 6 துண்டுகள்,
    வெந்தயம், மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
    நசுக்கிய பூண்டு - 5 பல்,
    சாம்பார் வெங்காயம் - 6,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது,
    நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காய், வேகவைத்த மொச்சை யாவும் கலந்தது - 1 கப்,
    உப்பு - தேவைக்கு.
    புளி - நெல்லிக்காய் அளவு,
    நல்லெண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    வாளை கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் வெந்தயம், மிளகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

    பின்பு கரைத்த புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர், உப்பு, முருங்கைக்காய், கத்திரிக்காய், மொச்சை, கருவாடு சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்து குழம்பு பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×