என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவான்மியூர் அட்வென்ட் கிறிஸ்தவ திருச்சபை நூற்றாண்டு விழா
Byமாலை மலர்1 May 2019 4:29 AM GMT (Updated: 1 May 2019 4:29 AM GMT)
சென்னை திருவான்மியூரில் உள்ள அட்வென்ட் கிறிஸ்தவ திருச்சபை நூற்றாண்டு விழாவை இன்று (புதன்கிழமை) கொண்டாடுகிறது.
சென்னை திருவான்மியூரில் உள்ள அட்வென்ட் கிறிஸ்தவ திருச்சபை நூற்றாண்டு விழாவை இன்று (புதன்கிழமை) கொண்டாடுகிறது. இந்த ஆலயம் அமைந்துள்ள இடத்தை 1917-ம் ஆண்டு அமெரிக்கன் அட்வென்ட் மிஷனரிகள் வாங்கி, 1919-ம் ஆண்டு ஓலைக்குடிசையில் பள்ளிக்கூடம் அமைத்தனர். தமிழ் மொழியில் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அங்கு பாடம் கற்றுக்கொடுத்தனர். வாரத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் அமெரிக்கன் மிஷனரிகளால் இங்கு ஆராதனை நடத்தப்பட்டது.
இப்போது கம்பீர தோற்றத்தோடு காட்சியளிக்கும் இந்த ஆலயம், அப்போது பள்ளிக்கூடத்துக்கு அருகில் சிறியதாக கட்டப்பட்டு, 1980-ம் ஆண்டில் ஓடு போட்டு ஆலயமாக மாற்றப்பட்டது. பின்னர், 1998-ம் ஆண்டில் கட்டிடமாக கட்டும் பணி தொடங்கி, 2009-ம் ஆண்டில் தான் இப்போதைய தோற்றத்தை பெற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலயத்தின் வளாகத்தில் இன்றளவும் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.
நூற்றாண்டு விழா இன்று காலை 9 மணியளவில் ஆலயத்தில் சிறப்பு ஆராதனையுடன் நடக்கிறது. ஆராதனையை பேராயர் எஸ்.டி.டேவிட் நடத்துகிறார்.
வட்டார பாதிரியார் ஏ.பிரான்சிஸ் தங்கதுரை, சபை பாதிரியார் பி.பால் எபிநேசர், சபை மூப்பர்கள் கே.எபிநேசர், ஜெ.எஸ்.தானியேல் உள்பட பலர் ஏற்பாடுகளை செய்து இருக்கின்றனர்.
இப்போது கம்பீர தோற்றத்தோடு காட்சியளிக்கும் இந்த ஆலயம், அப்போது பள்ளிக்கூடத்துக்கு அருகில் சிறியதாக கட்டப்பட்டு, 1980-ம் ஆண்டில் ஓடு போட்டு ஆலயமாக மாற்றப்பட்டது. பின்னர், 1998-ம் ஆண்டில் கட்டிடமாக கட்டும் பணி தொடங்கி, 2009-ம் ஆண்டில் தான் இப்போதைய தோற்றத்தை பெற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலயத்தின் வளாகத்தில் இன்றளவும் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.
நூற்றாண்டு விழா இன்று காலை 9 மணியளவில் ஆலயத்தில் சிறப்பு ஆராதனையுடன் நடக்கிறது. ஆராதனையை பேராயர் எஸ்.டி.டேவிட் நடத்துகிறார்.
வட்டார பாதிரியார் ஏ.பிரான்சிஸ் தங்கதுரை, சபை பாதிரியார் பி.பால் எபிநேசர், சபை மூப்பர்கள் கே.எபிநேசர், ஜெ.எஸ்.தானியேல் உள்பட பலர் ஏற்பாடுகளை செய்து இருக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X