search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயோத்தி ராமர் கோவில்"

    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை இடித்து விடுவார்கள்.
    • ராமர் மீண்டும் கூடாரத்துக்குச் செல்ல நேரிடுவார் என் பிரதமர் மோடி தெரிவித்தார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    அயோத்தி தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மாற்ற விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இது எப்படி சாத்தியம் என்று சிலர் நினைக்கலாம்.

    சுதந்திரப் போராட்டத்தின் போது நாட்டைப் பிரிக்கவேண்டும் என்று பேசும்போது, நாட்டைப் பிரிக்கமுடியாது என்று மக்கள் சொன்னார்கள். ஆனாலும் அது நடந்தது. அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்களின் சாதனை பதிவு அத்தகையது. அவர்களுக்கு நாடு முக்கியமில்லை. குடும்பம், அதிகாரம்தான் முக்கியம்.

    காங்கிரசும், சமாஜ்வாடியும் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடித்துவிடுவார்கள். காங்கிரஸ் வெற்றி பெற்றால் குழந்தை ராமர் கோவிலில் இருந்து மீண்டும் கூடாரத்திற்கே செல்வார். புல்டோசரை எங்கு பயன்படுத்த வேண்டும், எங்கு பயன் படுத்தக்கூடாது என்று யோகி ஆதித்யநாத்திடம் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

    தேர்தலில் வெற்றி பெற்று மோடி அரசு ஹாட்ரிக் சாதனை படைக்கும். தேர்தல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கி உள்ளன.

    பா.ஜக-தேசிய ஜனநாயக கூட்டணி தேசிய நலனுக்காக அர்ப்பணித்து உழைக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணி நாட்டில் உறுதியற்ற தன்மையை உருவாக்க களத்தில் உள்ளது.

    புதிய அரசில் ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்காக பல முக்கிய முடிவுகளை நான் எடுக்க உள்ளேன். ரேபரேலி மக்கள் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.

    இதைக்கேட்ட சமாஜ்வாதி இளவரசரின் (அகிலேஷ் யாதவ்) இதயம் உடைந்தது. கண்ணீர் மட்டும்தான் வரவில்லை. ஆனால் அவரது இதயத்தின் ஆசைகள் அனைத்தும் உடைந்துவிட்டன. அகிலேஷ் யாதவ் புதிய அத்தையின் (மம்தா பானர்ஜி) கீழ் அடைக்கலம் அடைந்துள்ளார்.

    இந்த புதிய அத்தை மேற்கு வங்காளத்தில் இருக்கிறார். அவர் (மம்தா பானர்ஜி) இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்துதான் ஆதரவு தருவேன் என கூறியுள்ளார்.

    உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் காரணமாக தற்போது நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் பரிசுகளைத் தேர்ந்தெடுக்க எனது மூளையை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. மாநில இணையதளத்தைப் பார்த்து பரிசு பொருட்களை எடுத்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

    • உ.பியில் 7ம் தேதி (நாளை) 3ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
    • பிரதமர் மோடியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி நேற்று சாமி தரிசனம் செய்தார்.

    ஜனவரி மாதம் நடைபெற்ற பிரதிஷ்டை விழாவுக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக அயோத்தி ராமர் கோவில் சென்றார்.

    இதைதொடர்ந்து, பிரதமர் மோடி வாகன பேரணி நடத்தினார். உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன், சுக்ரீவா கோட்டையில் இருந்து லதா சவுக் வரை பிரதமர் மோடி பேரணியில் பங்கேற்றார்.

    பிரதமர் மோடிக்கு பாஜகவினர், பொது மக்கள் உள்ளிட்டோர் கோஷம் எழுப்பியும், மலர் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர்.

    பிரதமர் மோடியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் வரும் 7ம் தேதி (நாளை) 3ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேரள மாநிலம் வயநாட்டில் தற்போது எம்.பி.யாக இருந்து வரும் ராகுல் காந்தி கடந்த தேர்தலில் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார்.
    • ராகுல் காந்தியும், பிரியங்காவும் மே மாதம் 1-ந்தேதியில் இருந்து 3-ந்தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பத்தின் கோட்டையாக ரேபரேலி தொகுதி இருந்து வருகிறது. கடந்த 1999-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இத்தொகுதி எம்.பி.யாக உள்ளார். சென்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஒரே தொகுதி ரேபரேலி ஆகும்.

    ஆனால் இம்முறை சோனியா காந்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இதையடுத்து அவர் மேல்- சபை எம்.பியாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் வருகிற தேர்தலில் ரேபரேலியில் யார் போட்டியிட போகிறார்கள்? என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இதுவரை காங்கிரஸ் சார்பில் இங்கு போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.

    நேரு குடும்பத்துக்கு சொந்தமானதாக கருதப்படும் இத்தொகுதியில் சோனியா காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி களம் இறக்கப்பட உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் பிரியங்கா முதல் முறையாக தேர்தலை நேரடியாக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    உத்தரபிரசேதத்தின் மற்றொரு தொகுதியான அமேதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரள மாநிலம் வயநாட்டில் தற்போது எம்.பி.யாக இருந்து வரும் ராகுல் காந்தி கடந்த தேர்தலில் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார்.

    கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை எம்.பி.யாக இருந்த அவர் சென்ற தேர்தலில் தற்போதைய மத்திய மந்திரியான ஸ்ருமிதி இரானியிடம் தோல்வியை தழுவினார். இருந்தபோதிலும் இம்முறை பாரதிய ஜனதாவை வீழ்த்தி வெற்றி கனியை எப்படியாவது பறித்து விட வேண்டும் என்ற முனைப்பில் ராகுல் காந்தி அமேதியில் களம் இறங்க உள்ளார். இன்னும் ஓரிரு நாளில் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட உள்ளனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ராகுல் காந்தியும், பிரியங்காவும் மே மாதம் 1-ந்தேதியில் இருந்து 3-ந்தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக இருவரும் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வழிபட முடிவு செய்துள்ளனர்.

    அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் 2-ம் கட்டமாக மே மாதம் 20-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 26-ந்தேதி தொடங்கி மே மாதம் 3-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது.

    • அயோத்தியில் ராமர் கோவிலில் கடந்த ஜனவரியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • இதையடுத்து தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

    லக்னோ:

    அயோத்தியில் மிக பிரமாண்டமான 3 அடுக்குகள் கொண்ட ராமர் கோவில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு கடந்த ஜனவரி மாதம் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதையடுத்து, அயோத்தி நகருக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் பல்வேறு அரசியல் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட பலர் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனாஸ் மற்றும் தனது குழந்தையுடன் அயோத்தி ராமஜென்ம பூமிக்கு இன்று சென்றார். அங்கு பால ராமரை தரிசனம் செய்தார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

    இதுதொடர்பான புகைப்படங்களை கோவில் பூசாரி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

    • சிஏஏ குறித்து ஐ.நா.வில் கேள்வி எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
    • இந்தியா தொடர்புடைய விஷயங்களில் பாகிஸ்தான் தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம் பேசுகையில், அயோத்தி ராமர் கோவில் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து குறிப்பிட்டார்.

    இந்நிலையில், ஐ.நா.சபையில் சிஏஏ சட்டம் மற்றும் அயோத்தி ராமர் கோவில் குறித்து கேள்வி எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஐ.நா.விற்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசித்ரா கம்போஜ் கூறியதாவது:

    இந்த அவையில் பாகிஸ்தான் ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறது. உலகம் வளர்ந்து வருகிறது. இந்தியாவின் அண்டை நாடானது ஒரே இடத்தில் தேங்கி நிற்பதுடன், ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது.

    எனது நாட்டுடன் தொடர்புடைய விஷயங்களில், அந்நாட்டு குழுவினர் தவறான கண்ணோட்டத்தை காண்பது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்தார்.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.
    • தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பகவான் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன்பின் பொதுமக்கள் பகவான் ராமரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்தி சென்று ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியா அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்கள் காத்திருக்கவும் என பா.ஜனதா கேட்டுக்கொண்டது.

    அதனால் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன் அயோத்தி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் இன்று உத்தரகாண்ட் மாநில முதல்வர புஷ்கர் சிங் தாமி தனது மந்திரிசபை மந்திரிகளுடன் அயோத்தி சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக இன்று உத்தரகாண்டில் இருந்து விமானம் மூலம் அயோத்தி புறப்பட்டனர். அப்போது ஜெய் சிய ராம் என முழங்கினர்.

    • டெல்லியில் இருந்து தொடங்கி வாரணாசி பிரயாக்ராஜ் வழியாக சென்று அயோத்தியில் முடிவடையும்.
    • ராஜஸ்தான் மாநிலத்தில் பயணித்து வந்த ரெயில், புதிய பாதையில் இயக்கப்பட உள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அயோத்தியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் அயோத்தி ரதம் இந்தியாவின் சொகுசு ரெயிலான பேலஸ் ஆன் வீல்ஸ் ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரெயில்வே மற்றும் ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து தொடங்கிய இந்த சொகுசு ரெயில் இணையற்ற விருந்தோம்பல், ஆடம்பர அறைகள், சுவாரசியமான பயணங்களுக்கு சர்வதேச அளவில் புகழ் பெற்றது. உலகளவில் முதல் 10 ஆடம்பரமான ரெயில் பயணங்களில் இதுவும் ஒன்று. இதனால் பேலஸ் ஆன் வீல்ஸ் சொகுசு ரெயில் பயணம் சுற்றுலாவுக்கு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அரண்மனையில் இருப்பது போன்ற உணர்வை தரும்.

    இந்த நிலையில் பேலஸ் ஆன் வீல்ஸ் ரெயிலில் இந்தியாவில் சில புனித நகரங்கள் வழியாக 6 நாள் புனித யாத்திரைக்கு பயணிகளை அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    டெல்லியில் இருந்து தொடங்கி வாரணாசி பிரயாக்ராஜ் வழியாக சென்று அயோத்தியில் முடிவடையும். ராஜஸ்தான் மாநிலத்தில் பயணித்து வந்த ரெயில், புதிய பாதையில் இயக்கப்பட உள்ளது.

    புனித யாத்திரையில் ரெயிலில் பிரத்யேகமாக சைவ உணவுகளே வழங்கப்படும். மதுபானங்கள் வழங்கப்பட மாட்டாது. மாதத்துக்கு 2 முறை புனித யாத்திரை சுற்றுலா ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக ரெயில் ரூ.7 கோடியில் புதுப்பித்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. சொகுசு ரெயில் புனித யாத்திரை கட்டணம் ஒரு நபருக்கு லட்சக்கணக்கில் இருக்கும்.

    • உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
    • கடந்த மாதம் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்தார்.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ.3,000 கோடி செலவில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி அந்த ஆலயத்தில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி விழாவில் கலந்துகொண்டு ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

    பாரதிய ஜனதா கட்சி தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராமர் கோவில் விவகாரம் வடமாநிலங்களில் மிகவும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, ராமர் கோவில் பற்றி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தக்கோரி மக்களவையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் சத்யபால்சிங், பிரதாப் சந்திரா சாரங்கி, சிந்தோர் பாண்டே, சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோரும் மேல்-சபையில் எம்.பி.க்கள் கே.லட்சுமணன், சுதன்ஷூ திவேதி, ராகேஷ் சின்கா ஆகியோரும் தீர்மானம் கொண்டு வந்தனர்.

    இதற்கிடையே இன்று பாராளுமன்றத்தில் மிக முக்கியமான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், இரு அவைகளிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் ஆஜராகுமாறும் கொறடா உத்தரவு பிறப்பித்தார்.

    இந்நிலையில், இன்று பாராளுமன்ற மக்களவையில் அயோத்தி ராமர் கோவில் தொடர்பான தீர்மானம் மீது விவாதம் நடந்தது.

    அப்போது பேசிய பா.ஜ.க. எம்.பி. சத்யபால் சிங், இந்த விவாதத்தில் பங்கேற்று பேசுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பார்த்தது, கடவுள் ராமரை தரிசனம் செய்தது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். ராமர், இந்துக்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் சொந்தமானவர். ராமரை காங்கிரஸ் கேள்விக்கு உள்ளாக்கி வருகிறது என தெரிவித்தார்.

    • தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் அவர்களை கட்டுப்படுத்த அயோத்தி கோவில் தீர்த்த அறக்கட்டளை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
    • சபரிமலைக்குச் சென்று பார்வையிட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    அயோத்தி ராமரை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

    தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் அவர்களை கட்டுப்படுத்த அயோத்தி கோவில் தீர்த்த அறக்கட்டளை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி வரிசையில் அனுப்பி தரிசனம் வைப்பது குறித்து திருப்பதி, சபரிமலை மற்றும் மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

    சில நாட்களில் அவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வர உள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக தினமும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களை ஒழுங்குபடுத்துதல் அவர்களின் வாகனங்களை போக்குவரத்து இடைஞ்சல் இல்லாத இடங்களில் பார்க்கிங் செய்வது, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்வது குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.


    விரைவில் திருப்பதிக்கு வர உள்ள அயோத்தி தீர்த்த அறக்கட்டளை அதிகாரிகள் பக்தர்கள் வரிசையில் செல்லும் இடங்கள் மற்றும் உணவு தயாரிக்கும் சமையலறை, பிரசாதம் விநியோகிக்கும் முறைகள் மேலும் மலைப்பாதையில் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல்களை ஆய்வு செய்ய உள்ளனர்.

    இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

    இதையடுத்து சபரிமலைக்குச் சென்று பார்வையிட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண் கோவா செல்ல திட்டமிட்டு புறப்பட இருந்த ஒருநாளைக்கு முன்னர் தான் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வேதனை அடைந்த பெண் எந்த பிரச்சனையையும் உருவாக்கவில்லை என்று கூறிவிட்டு அவர்களுடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.டி. துறையில் பணிபுரியும் பெண்ணும், ஆணும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதி தேனிலவுக்கு எங்கும் செல்லாத நிலையில், கணவர் தேனிலவுக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்வார் என்று அப்பெண் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவரது கணவர் தனது பெற்றோரை கவனிக்க வேண்டும் என்று கூறி அதை நிராகரித்துள்ளார்

    இந்நிலையில், அத்தம்பதி தேனிலவுக்காக கோவா செல்ல திட்டமிட்டு ஏற்பாடுகளையும் செய்த நிலையில், திடீரென கணவரின் தாய் அயோத்தியில் ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டைக்கு முன் அந்த இடங்களுக்கு செல்ல விரும்புவதாகக் கூறி அயோத்தி மற்றும் வாரணாசிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    இதனையடுத்து அப்பெண் கோவா செல்ல திட்டமிட்டு புறப்பட இருந்த ஒருநாளைக்கு முன்னர் தான் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேதனை அடைந்த அந்த பெண் எந்த பிரச்சனையையும் உருவாக்கவில்லை என்று கூறிவிட்டு அவர்களுடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில், அயோத்தி மற்றும் வாரணாசியில் இருந்து தம்பதியும் அவரது மாமியாரும் திரும்பி வந்து பத்து நாட்களுக்குப் பிறகு அப்பெண், கடந்த வாரம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    • அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
    • 500 ஆண்டு கால அவமானங்கள் துடைக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறியது இந்துக்களை அவமானப்படுத்துவதாக உள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமாமிர்த தொண்டைமான் சிலையை இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: -

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 500 ஆண்டு கால அவமானங்கள் துடைக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறியது இந்துக்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. இந்துக்களை நாங்கள் தான் வளர்த்தோம் எனவும் கூறுகின்றனர். ஆனால் இந்துக்கள் தாங்களாகவே வளர்ந்தார்கள்.


    மனைவியை கூட கவனிக்க முடியாத பிரதமர், ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தது தவறு. அயோத்தி அரசியல் இந்தியாவில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமர் கோவில் குறித்து நாம் பார்த்தவை நினைவுகளில் பொறிக்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார்.
    • பிராண பிரதிஷ்டை விழாவின் வீடியோ ஒன்றையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

    புதுடெல்லி:

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. பால ராமருக்கு பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்தார்.

    இந்த நிலையில் ராமர் கோவில் குறித்து நாம் பார்த்தவை நினைவுகளில் பொறிக்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஜனவரி 22-ந்தேதி (நேற்று) அயோத்தியில் என்ன பார்க்கப்பட்டதோ அவை பல ஆண்டுகள் நமது நினைவுகளில் பொறிக்கப்படும்.

    இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

    அத்துடன் பிராண பிரதிஷ்டை விழாவின் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    ×