search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliament election"

    • அரியானா சட்டசபையின் பதவிக் காலம் வருகிற அக்டோபர் மாதம் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
    • இந்திய தேசிய லோக் தளம், அரியானா ஹோகித் கட்சிக்கு தலா ஒரு உறுப்பினா் உள்ளனா்.

    சண்டிகர்:

    அரியானாவில் முதல்-மந்திரி நாயப் சிங் சைனி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

    பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கடந்த 8-ந்தேதி வாபஸ் பெற்றனா். அத்துடன், முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

    90 உறுப்பினா்களைக் கொண்ட அரியானா பேரவையில் தற்போது 88 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனா். பா.ஜ.க.வுக்கு 40, காங்கிரசுக்கு 30, ஜே.ஜே.பி. கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனா். இந்திய தேசிய லோக் தளம், அரியானா ஹோகித் கட்சிக்கு தலா ஒரு உறுப்பினா் உள்ளனா். இதுதவிர 6 சுயேச்சைகள் உள்ளனா்.

    அரியானாவில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜே.ஜே.பி. கடந்த மாா்ச் மாதம் விலகிய நிலையில், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்தது. அப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-மந்திரி நாயப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் பா.ஜ.க. அரசுக்கான ஆதரவை 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் திரும்பப் பெற்றதால், அக்கட்சிக்கு 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையில் 2 இடங்கள் அக்கட்சிக்கு குறைவாக உள்ளன.

    பா.ஜ.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வரப்பட்டால், அதை ஆதரிக்க தயாா் என்று ஜே.ஜே.பி. தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில், ஜே.ஜே.பி. தலைவரும் முன்னாள் துணை முதல்-மந்திரியுமான துஷ்யந்த் சவுதாலா, மாநில கவனர்னருக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    அரியானா பா.ஜ.க. அரசு பெரும்பான்மையை இழந்திருப்பது தெளிவாகியுள்ளது. தற்போதைய அரசியல் குழப்பத்தை கருத்தில் கொண்டு, அரசமைப்புச் சட்டப் பிரிவு 174-ன்கீழ் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

    பா.ஜ.க. அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத பட்சத்தில், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பெரும்பான்மையை இழந்துவிட்ட பா.ஜ.க. அரசு, தாா்மீக அடிப்படையில் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான பூபிந்தா் சிங் ஹூடா வலியுறுத்தி உள்ளாா்.

    மேலும், மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக கவர்னரை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

    இதற்கிடையே முதல்-மந்திரி நாயப் சிங் சைனி கா்னாலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில அரசுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. கடந்த மாா்ச் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றோம். நேரம் வரும்போது, மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் முதல்-மந்திரி மனோகா் லால் கட்டார் கூறுகையில், "பா.ஜ.க.வுடன் பல எம்.எல்.ஏ.க்கள் தொடா்பில் இருப்பதால் கவலைப்பட எதுவுமில்லை" என்றாா்.

    ஜே.ஜே.பி. கட்சி எம்.எல்.ஏ.க்களில் 4 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவளிப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த 4 எம்.எல்.ஏ.க்களும் நேற்று ரகசியமாக முன்னாள் முதல்-மந்திரி கட்டாரை சந்தித்துப் பேசினார்கள். எனவே அரியானா பா.ஜ.க. அரசுக்கு ஆபத்து ஏற்படாது என்று கூறப்படுகிறது.

    அரியானா சட்டசபையின் பதவிக் காலம் வருகிற அக்டோபர் மாதம் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அகிலேஷ் யாதவ் களம் இறங்கி உள்ளதால் போட்டி கடுமையாகி உள்ளது.
    • பாரதிய ஜனதா மீண்டும் தனது பலத்தை நிரூபிக்குமா? என்பது ஜூன் மாதம் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையில் தெரிந்து விடும்.

    லக்னோ:

    பாரதிய ஜனதாவின் கோட்டையாக திகழ்ந்து வரும் உத்தரபிரதேசத்தில் அம்மாநில முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சித்தலைவருமான அகிலேஷ்யாதவ் பாராளுமன்ற தேர்தலில் நேரடியாக களம் இறங்கியது அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது. அங்குள்ள கண்ணூஜ் தொகுதியில் அவர் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

    முதலில் இத்தொகுதியில் அகிலேஷ் யாதவ்வின் சகோதரி மகன் தேஜ் பிரதாப் சிங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் தனது மாமாவுக்காக ( அகிலேஷ்யாதவ்) தொகுதியை விட்டு கொடுத்தார். இதனால் கண்ணூஜ் நட்சத்திர தொகுதியாக மாறியது. இத்தொகுதியில் அவர் ஏற்கனவே 2000, 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்தார். கண்ணூஜ் தொகுதியை பொறுத்த

    வரை அகிலேஷ் யாதவின் குடும்ப தொகுதியாக இருந்து வருகிறது.

    இத்தொகுதியில் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ் ஒருமுறையும், அகிலேஷ் 3 முறையும், அவரது மனைவி டிம்பிள் யாதவ் ஒரு முறையும் வெற்றி வாகை சூடி உள்ளனர். இந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்ரத் பதக் உள்ளார். இம்முறையும் இவர் மீண்டும் போட்டியிடுகிறார். 2014-ம் ஆண்டு தேர்தலில் இவரை டிம்பிள் யாதவ் 19,907 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதற்கு பழி வாங்கும் வகையில் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் டிம்பிள் யாதவைவிட 12,353 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று சுப்ரத் பதக் வெற்றி பெற்றார்.

    இம்முறை டிம்பிள் யாதவ் தொகுதி மாறி போட்டியிடுகிறார். அவரது இடத்தை நிரப்பும் வகையில் அவரது கணவர் களத்தில் குதித்துள்ளார்.

    இந்த முறை சமாஜ்வாடி கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து இந்தியா கூட்டணி சார்பில் அகிலேஷ் நிற்பதால் கண்டிப்பாக எங்களுக்கு தான் வெற்றி என அக்கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அதே சமயம் பாரதிய ஜனதாவை பொறுத்தவரை இது ஒரு கவுரவ பிரச்சனை. எப்படியும் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அகிலேஷ் யாதவை வீழ்த்துவோம் என பாரதிய ஜனதாவினர் கூறி உள்ளனர். தனது ஆஸ்தான தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அகிலேஷ் யாதவ் களம் இறங்கி உள்ளதால் போட்டி கடுமையாகி உள்ளது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுவது போன்ற சூழ்நிலை கண்ணூஜ் தொகுதியில் நிலவுவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இத்தொகுதியில் சுமார் 19 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 லட்சம் பேர் முஸ்லீம்கள், யாதவர்கள், பிராமணர்கள் தலா 2.5 லட்சம் பேர் உள்ளனர். கண்ணூஜ்ஜில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் தலித் வாக்குகள் மிக முக்கியமாக உள்ளது. தலித்துகள் சுமார் 4 லட்சம் பேர் உள்ளனர். இவர்களை தவிர ராஜபுத்திரர்கள், வைசியர்கள், மற்றும் குர்மி சமூகத்தினர் கணிசமானவர்கள் வசித்து வருகின்றனர்.

    இத்தொகுதியில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி தனது கட்சி சார்பில் இம்ரான் பின் ஜாபரை நிறுத்தி உள்ளார்.

    இவர் தலித் ஓட்டுகள் மட்டுமல்லாது முஸ்லீம் ஓட்டுகளையும் பிரிப்பார் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. வாக்காளர்கள் மத்தியில் போதிய அளவு வேலை வாய்ப்பு இல்லை என்ற எண்ணம் உள்ளது. ஏராளமானவர்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர். இது இத்தேர்தலில் பெரும் சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. கண்ணூஜ் தொகுதியில் இம்முறை பாரதீயஜனதா- சமாஜ்வாடி, கட்சிகளுடன் ஓட்டு வங்கி வைத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியும் பலப்பரீட்சையில் இறங்கி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியை பொறுத்த வரை இத்தொகுதியில் இதுவரை வென்றதாக வரலாறு இல்லை. இதனால் பதக்-யாதவ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்தி 4-வது முறையாக அகிலேஷ் யாதவ் சாதிப்பாரா? அல்லது பாரதிய ஜனதா மீண்டும் தனது பலத்தை நிரூபிக்குமா? என்பது ஜூன் மாதம் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையில் தெரிந்து விடும்.

    • மோடி போன்ற வாட்ச்மேன் இருக்கும் போது, ​​உங்கள் உரிமைகளை பறிக்க முடியுமா?
    • போலி சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் என்னை உயிருடன் புதைக்கப் பேசுகிறார்கள்.

    மும்பை:

    பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பாரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    என்னைப் பொறுத்தவரை, பழங்குடியினருக்கு சேவை செய்வது எனது குடும்பத்திற்கு சேவை செய்வது போன்றதாகும். ஆதிவாசிகளின் நலன் குறித்து காங்கிரஸ் ஒருபோதும் கவலைப்படவில்லை.

    மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களின் முதுகில் குத்துவது போன்றதாகும். இது அளவிட முடியாத பாவம். இடஒதுக்கீடு மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது காங்கிரஸ் பொய்களைப் பரப்புகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஒரே இரவில் அனைத்து முஸ்லிம்களையும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது.

    உங்களது ஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்குவதே காங்கிரஸின் மறைக்கப்பட்ட செயல்திட்டம். நான் உயிருடன் இருக்கும் வரை தலித்துகள், ஆதிவாசிகள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்க அனுமதிக்க மாட்டேன்.

    மதத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு சலுகைகளை வழங்குவது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதிப்புகள், கொள்கைகளுக்கு எதிரானது. கடந்த 17 நாட்களாக காங்கிரசுக்கு நான் சவால் விடுத்து வருகிறேன். எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி இடஒதுக்கீட்டை துண்டு துண்டாக வெட்டி முஸ்லிம்களுக்கு ஒரு துண்டாக கொடுக்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாகத் தருமாறு கேட்டுக்கொண்டேன்.

    ஆனால் அவர்கள் பதில் சொல்லவில்லை. நான் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்கு காவலன். மோடி போன்ற வாட்ச்மேன் இருக்கும் போது, உங்கள் உரிமைகளை பறிக்க முடியுமா?

    வளர்ச்சியில் மோடியுடன் போட்டியிட முடியாது என்பது காங்கிரசுக்கு தெரியும். எனவே இந்த தேர்தலில் பொய்களின் தொழிற்சாலையை அவர்கள் திறந்துள்ளனர். இந்து நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதியில் ஈடுபட்டுள்ளது. ராமர் கோவில் கட்டுவது இந்தியாவின் கருத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் இளவரசரின் (ராகுல்காந்தி) குரு சாம் பிட்ரோடா அமெரிக்காவிடம் கூறியுள்ளார்.

    போலி சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் என்னை உயிருடன் புதைக்கப் பேசுகிறார்கள். இது காங்கிரசுடன் இணைவதற்கு போலி தேசியவாத காங்கிரசும், சிவசேனாவும் முடிவெடுத்திருப்பதற்கான அறிகுறி ஆகும்.

    இவ்வாறு மோடி பேசினார்.


    • கேமராக்கள் மூலம் வெளியே அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொண்டர்களுக்காக தினமும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த மாதம் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்டுள்ள அந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

    கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் வெளியே அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

    சுமார் 100 மீட்டர் தொலைவில் ஒரு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் தங்கள் தொண்டர்களையும் பாதுகாப்புக்கு அனுப்பி உள்ளனர். சுமார் 10 முதல் 20 பேர் தினமும் சுழற்சி முறையில் விடிய விடிய காவல் இருக்கிறார்கள்.

    எந்த நேரத்தில் கேமராக்கள் பழுது பட்டாலும் உடனடியாக வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் தங்கள் கட்சி தலைமைக்கும், தேர்தல் அதிகாரிக்கும் தகவல் தெரிக் கிறார்கள்.

    ஒரே கொட்டகையில் ஒவ்வொரு கட்சியின் உறுப்பினர்களும் ஒன்றாக அமர்ந்து இருப்பதால் ஒருவருக்கொருவர் பகைமையை மறந்து பேசி கொள்கிறார்கள். உணவுகளையும் பரிமாறி கொள்கிறார்கள்.

    இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொண்டர்களுக்காக தினமும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குகிறார்கள். இது தவிர மூன்று வேளையும் உணவும், நொறுக்கு தீனிகளும் வழங்கப்படுகிறது.

    இந்த பணிகள் ஓட்டு எண்ணும் நாளான அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி வரை தொடரும் என்று கூறினார்கள்.

    • கடந்த 10 ஆண்டுகளில் 22 பெரிய தொழிலதிபர்களுக்காக மோடி உழைத்தார்.
    • அங்கன்வாடி பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டம் நர்சாபூர் மற்றும் ஐதராபாத் சரூர் நகர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது :-

    இந்திய அரசியலமைப்பு ஒரு புத்தகம் மட்டும் அல்ல. ஏழைகளின் இதய துடிப்பு. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்டத்தை அதிரடியாக மாற்றுவோம்.

    இட ஒதுக்கீட்டை ஒழிப்போம் என்று பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் கூறி வருகிறது. அம்பேத்கர், மகாத்மா காந்தி, நேரு ஆகியோர் அரசியல் சட்டத்திற்காக போராடினார்கள்.

    அவர்கள் உருவாக்கிய அரசியல் சட்டத்தை மாற்றி அவர்களின் தியாகத்தை வீணாக்குவது தான் பா.ஜ.க.வின் யோசனையாக தற்போது இருக்கிறது. அரசியல் சாசனத்தை காங்கிரஸ் முன் நின்று பாதுகாக்கும்.

    தற்போது இதற்காகத்தான் தேர்தல் போர் நடந்து கொண்டிருக்கிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் 22 பெரிய தொழிலதிபர்களுக்காக மோடி உழைத்தார். அவர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். இந்த நிதி மூலம் நாடு முழுவதும் 24 ஆண்டுகளுக்கு தேவையான வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்திருக்கலாம்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம். நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் சட்டப்படி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச ஊதியம் ரூ. 250-ல் இருந்து 400 ஆக உயர்த்தப்படும்.

    அங்கன்வாடி பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படும். கோடீஸ்வரர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஏழைகளின் வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி அரசு கோடீஸ்வரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றியது.

    நாங்கள் ஏழைகளை கோடீஸ்வரர்களாக மாற்றுவோம். தொழிலதிபர்களின் லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் தள்ளுபடிக்கு பதில் சொல்லாதவர்கள் ஏழைகளுக்கு நல்லது செய்வீர்களா என எங்களை பார்த்து கேள்வி கேட்கின்றனர். நாங்கள் எப்போதும் ஏழைகளின் பக்கம் தான் நிற்கிறோம். ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் இந்தியா முழுவதும் 30 லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்புவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி இருவரும் அரசு பஸ்சில் பயணம் செய்தனர்.

    ராகுல் காந்தி நின்றபடியே அரசு பஸ்சில் பயணம் செய்தார். அவர் பெண்களுக்கான இலவச பஸ் பயண வசதி குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். ராகுல் காந்தி பஸ் பயணத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாக்குப்பதிவு அன்று வாக்களித்துவிட்டு வரும் நபர்களுக்கு தனது கடையில் இலவசமாக முடி வெட்டுவேன்.
    • சலூன் கடைக்காரரின் இந்த வினோத அறிவிப்பு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் ஒருவர் ஓட்டு போடுபவர்களுக்கு இலவசமாக முடி வெட்டப்படும் என அறிவித்துள்ளார்.

    விசாகப்பட்டினம் நகரில் உள்ள ஆர்.கே. சலூன் உரிமையாளர் ராதாகிருஷ்ணன். வாக்குப்பதிவு அன்று வாக்களித்துவிட்டு வரும் நபர்களுக்கு தனது கடையில் இலவசமாக முடி வெட்டுவேன்.

    பொதுமக்கள் ஓட்டு போட்டதும் எனது கடைக்கு வந்து இலவசமாக முடி வெட்டிக் கொள்ளலாம். மேலும் விசாகப்பட்டினத்தில் முத்தியாலம்மா கோவில் அருகிலுயும் எனக்கு மற்றொரு கடை உள்ளது. அங்கு சென்று பொது மக்கள் இலவசமாக முடி வெட்டிக் கொள்ளலாம்.

    இந்த சலுகையை பெற வாக்கு அளித்ததற்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும். பொதுமக்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    சலூன் கடைக்காரரின் இந்த வினோத அறிவிப்பு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தனது மகன் இன்பநிதியுடன் இருக்கும் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • உதயநிதி ஸ்டாலின் நாளை சென்னை திரும்புவார் என்று தகவல்.

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலின் போது 24 நாட்களாக பிரசாரம் மேற்கொண்டார்.

    பின்னர், தேர்தலின் போது தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவியுடன் வந்து அவர் வாக்களித்தார்.

    தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் முழுமையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள முடியாத நிலை உள்ளது.

    இதன் காரணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10 நாள் பயணமாக லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

    சென்னையில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து லண்டன் சென்றார்.

    அப்போது, விமானத்தில் பயணத்தின்போது தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தின் கேப்சனில் ரியல் ரவுடி என்று அவர் பதிவிட்டிருந்தார்.

    இந்த நிலையில், தனது மகன் இன்பநிதியுடன் இருக்கும் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபகாலமாக மலையாள படமான ஆவேஷம் படத்தில் பகத் பாசில் வீடியோ போன்று உதயநிதியுடம், இன்பநிதியும் ரீல்ஸ் செய்தனர்.

    இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உதயநிதி ஸ்டாலின் நாளை சென்னை திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரியின் உள்ளே ரகசிய அறை அமைத்து பணத்தை கொண்டு சென்றது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • ஐதராபாத்தில் இருந்து குண்டூருக்கு பணத்தை எடுத்து சென்றதாக பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் 175 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது. இதனால் பணம் பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கரிகாபாடு சோதனை சாவடியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள கரிகாபாடு சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரியின் உள்ளே ரகசிய அறை அமைத்து பணத்தை கொண்டு சென்றது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஐதராபாத்தில் இருந்து குண்டூருக்கு பணத்தை எடுத்து சென்றதாக பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நரேந்திர மோடி தனது நண்பர்களான கோடீஸ்வரர்களின் ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்.
    • அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.

    பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் பிரசாரம் செய்தார்.

    அப்போது பேசிய மோடி, "காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) ரபேல் விவகாரத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர்கள் பற்றியே பேச ஆரம்பித்தார்.பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திவிட்டார்.

    ஒரே இரவில் அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திய நீங்கள் என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்? இதில் காங்கிரஸ் நாட்டுக்கு பதில் சொல்ல வேண்டும்" என்று பிரதமர் மோடி பேசினார்.

    இந்நிலையில் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு தொடர்பாக ரேபரேலியில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

    பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், "பெரும் தொழிலதிபர்களுடன் நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி தினமும் கூறுகிறார். நரேந்திர மோடி தனது நண்பர்களான கோடீஸ்வரர்களின் ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார், ஆனால் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை. இதற்கு நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும்

    அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவர்களின் பெயரை கூட உச்சரிக்காத பிரதமர் மோடி, தேர்தலுக்காக இப்படி பேசுகிறார்" என்று தெரிவித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விளையாட்டிலும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம்
    • இந்திய கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை மத அடிப்படையில் முடிவு செய்வார்கள்

    மத்தியபிரதேச மாநிலம் தார் பகுதியில் நேற்று பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது பேசிய அவர், "விளையாட்டிலும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்திய கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை மத அடிப்படையில் முடிவு செய்வார்கள்.

    1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த போது காங்கிரஸ் ஏன் அதை 3 துண்டுகளாக பிரித்தார்கள். அவர்கள் அப்போதே முழு நாட்டையும் பாகிஸ்தானாக மாற்றி இந்தியாவின் தடயங்களை அழித்திருக்க வேண்டும்.

    மோடி உயிருடன் இருக்கும் வரை போலி மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்தியாவை அழிக்க விட மாட்டேன். ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய காங்கிரஸ் விரும்புகிறது.

    பாஜக 400 இடங்களில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் 'பாபரின் பெயரில்' ராமர் கோவிலுக்கு காங்கிரஸ் பூட்டு போட்டுவிடும் மற்றும் ஜம்மு காஷ்மீரின் 370 சட்டப்பிரிவை காங்கிரஸ் மீண்டும் கொண்டுவரும்" என்று தெரிவித்தார்.

    • கேரள மாநில மக்களவை தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது.
    • கட்சி தலைவர்களின் இந்த கணக்கீடு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியினரின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடது சாரி ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

    இதனால் கேரள மாநில மக்களவை தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் நேரடியாக களம் கண்ட தொகுதிகளில் அந்த கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.

    ஏற்கனவே 19 தொகுதிகள் தங்களது கூட்டணியின் வசம் உள்ள செல்வாக்குடன் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் களம் கண்டது. பாரதிய ஜனதாவோ முதன்முறையாக வெற்றி பெற்று கேரளாவில் கால்பதித்து விட வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது.

    மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்டு கட்சி, தேசிய அளவில் கூட்டணியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து களம் கண்டது. பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் இந்த 3 கட்சிகளும் போட்டியிட்டன.

    ஏற்கனவே 19 தொகுதிகளை தன் வசம் வைத்துள்ள காங்கிரஸ் மற்றும் மாநிலத்தின் ஆளும் கட்சி கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளை எதிர்த்து களம் கண்ட பாரதிய ஜனதா, அந்த கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெறும் வகையில் பிரபலங்களை வேட்பாளர்களாக களமிறக்கியது.

    இதன் காரணமாக கேரள மாநில மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் கேரளாவில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம்? கடந்த தேர்தலை விட தற்போது எத்தனை வாக்குகள் அதிகமாக கிடைக்கும்? வாக்கு சதவீதம் எவ்வளவு உயரும்? உள்ளிட்ட விவரங்களை பாரதிய ஜனதா கணக்கிட்டு உள்ளது.

    அந்த விவரங்கள் தேர்தல ஆய்வு கூட்டத்தில் கணக்கிடப்பட்டு இருக்கிறது. மேலும் தங்களின் கணக்கீடு விவரங்களை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கேரளா மாநிலத்தில் இதற்கு முன்பு நடந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 31.80 வாக்குகள் கிடைத்தன. இந்த முறை 41.44 லட்சம் வாக்குகள் கிடைக்கும். கேரளாவில் பாரதிய ஜனதாவின் வாக்கு சதவீதம் 22 சதவீதமாக அதிகரிக்கும்

    திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் 4 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார்கள். மத்திய மந்திரி முரளீதரன் போட்டியிட்ட அட்டிங்கல் தொகுதியிலும், ஏ.கே அந்தோணியின் மகன் அனில் ஆன்டனி போட்டியிட்ட பத்தினம்திட்டா தொகுதியிலும் பாரதிய ஜனதா வெற்றிபெறும்.

    அதேபோல் ஆலப்புழா தொகுதியில் போட்டியிடும் ஷோபா சுரேந்திரனும் வெற்றி பெறுவார். கேரளாவில் மொத்தம் 5 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெறும். திருவனந்தபுரத்தில் கடந்த முறை 3,16,000 வாக்குகள் பெற்றிருந்தோம். இந்த முறை 4 லட்சம் வாக்குகளை பெறுவோம். நெய்யாற்றின்கரை தொகுதியில் பாரதிய ஜனதா இரண்டாவது இடத்தை பிடிக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    கட்சி தலைவர்களின் இந்த கணக்கீடு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியினரின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • கட்சி பிரமுகர்கள், இந்த ஸ்ட்ராங் ரூமை தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.
    • விழுப்புரத்தில் இடி மின்னலுடன் பெய்த திடீர் மழையால், கேமராவில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் பாராளுமன்ற தனி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் கடந்த 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரில் வைக்கப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இது தவிர அந்த வளாகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இம்மையத்திற்கு விழுப்புரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பழனி தினமும் சென்று கண்காணித்து, கையொப்பமிட்டு வருகிறார். இது தவிர அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முக்கிய கட்சி பிரமுகர்கள், இந்த ஸ்ட்ராங் ரூமை தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் இயங்கி வந்த சி.சி.டி.வி. கேமராக்கள் இன்று காலை 7.30 மணிக்கு பழுதானது. இதனால் அங்கு அமைக்கப்பட்ட டி.வி.க்களில் சி.சி.டி.வி. கேமரா பதிவு ஒளிபரப்பாகவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடங்கள் போராடி, சி.சி.டி.வி. கேமராக்களை சரி செய்தனர்.

    விழுப்புரத்தில் இடி மின்னலுடன் பெய்த திடீர் மழையால், சி.சி.டி.வி. கேமராவில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இத்தகவல் அறிந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் ஸ்ட்ராங் ரூம் வளாகத்திற்குள் குவிந்தனர். இதனால் இப்பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.

    கடந்த 3-ந் தேதியன்று இதே இடத்தில் சி.சி.டி.வி. கேமராவில் பழுது ஏற்பட்டு சுமார் ஒரு மணிநேரம் கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதற்கு மின் கோளாறு மட்டுமே காரணம் என்றும், வாக்குப் பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதெனவும், கலெக்டர் தெரிவித்தார். மேலும், இது போன்ற பிரச்சனைகள் இனி ஏற்படாதெனும், அதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    ஆனால், இன்று காலையில் ஸ்ட்ராங் ரூமில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் திடீரென இயங்காததால் அரசியல் கட்சியினரிடையே பல்வேறு கேள்வி களையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    ×