search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayakumar"

    • மாயமான அன்று அவர் எங்கெல்லாம் சென்றார்? என்பது குறித்து சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
    • தடயவியல் நிபுணர்கள் அவரது வீடு மற்றும் தோட்டத்தில் ஆய்வு செய்து வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    கடந்த 2-ந்தேதி நள்ளிரவு அல்லது 3-ந் தேதி அதிகாலையில் அவர் இறந்திருக்கலாம் என்று தடயவியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மாயமான அன்று அவர் எங்கெல்லாம் சென்றார்? என்பது குறித்து சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் 2-ந் தேதி திசையன்விளை பஜாரில் உள்ள ஒரு கடையில் இரவு 10.10 மணி அளவில் ஜெயக்குமார் சாதாரணமாக சிரித்து பேசிக் கொண்டிருப்பதும், அந்த கடையில் அவர் ஒரு டார்ச் லைட் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு புறப்படும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

    அவர் இறப்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக பல்வேறு தடயங்கள் சிக்கியுள்ள நிலையில் மேலும் சில தடயங்கள் சிக்கலாம் என்ற அடிப்படையில் தடயவியல் நிபுணர்கள் அவரது வீடு மற்றும் தோட்டத்தில் ஆய்வு செய்து வந்தனர்.

    இந்நிலையில் ஜெயக்குமார் வாங்கிய டார்ச் லைட் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரிக் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து டார்ச் லைட் மீட்கப்பட்டுள்ளது. முழுவதும் எரிந்த நிலையில் டார்ச் லைட் மீட்கப்பட்ட நிலையில் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஜெயக்குமார் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்பு.
    • காவல்தறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நேற்று முன்தினம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    நேற்று உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலம் என்ற பெயரில் 2 கடிதங்களை ஜெயக்குமார் எழுதியிருந்தார்.

    இந்நிலையில், ஜெயக்குமார் மரண வழக்கு வேகமெடுக்கிறது.

    நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

    அதன்படி, நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், மூத்த காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.

    ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக காவல்தறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    ஆலோசனை கூட்டத்தில், வழக்கு தொடர்பாக கிடைத்த முதற்கட்ட விவரங்களை கொண்டு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 7 தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    • குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்.
    • பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

    நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்து வருகிறது.

    2 மருத்துவர் குழு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

    பிதேர பரிசோதனை முடிந்த பிறகே, இது கொலையா ? தற்கொலையா உ என தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

    சம்பவ இடத்தில் டிஐஜி ஆய்வு செய்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • ஜெயக்குமார் படுகொலை வழக்கில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.
    • தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் 2 நாட்களாக மாயமான நிலையில், இன்று வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    உடலை மீட்ட போலீசார் இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயக்குமாரின் மரணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையே பொறுப்பு என்றும், இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங் , உவரியை அடுத்த கரைசுத்துபுதூர் என்ற இடத்தில் உள்ள அவரது தோட்டத்தில் கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

    ஓர் அரசியல் கட்சியின் மாவட்டத் தலைவராக இருப்பவர், காவல்துறையில் புகார் அளித்தும் கூட அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது.

    காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மகிழுந்து அவரது தோட்டத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. அவரது உடல் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டுள்ளது. அவரது உடலின் பெரும்பகுதி எரிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மைகளை வைத்துப் பார்க்கும் போது அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. அவரது உடலை படம் பிடிப்பதற்குக் கூட காவல்துறையினர் பத்திரிகையாளர்களை அனுமதிக்காதது ஐயத்தை உறுதி செய்திருக்கிறது.

    ஜெயக்குமாரை கடந்த 3 நாட்களாகவே காணவில்லை. இது தொடர்பாக அவரது மனைவியும், மகனும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அவர்களுக்கு முன்பாக கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி ஜெயக்குமாரே தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறை செயல்பட்டிருந்தால் ஜெயக்குமாரை காப்பாற்றியிருக்கலாம். ஆனால், காவல்துறை செயல்படத் தவறி விட்டது. ஜெயக்குமாரின் படுகொலைக்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.

    ஜெயக்குமார் படுகொலை வழக்கில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இந்த வழக்கை தமிழகக் காவல்துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. அதனால் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.
    • ஜெயக்குமார் தன்சிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் 2 நாட்களாக மாயமான நிலையில், இன்று வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    உடலை மீட்ட போலீசார் இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயக்குமாரின் மரணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் அவர்கள் 2 நாட்களாக காணவில்லை என்று அவரது மகன் புகார் அளித்திருந்த நிலையில், அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

    இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை நான் தினந்தோறும் சுட்டிக்காட்டி வருகிறேன். தற்போது, ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்.

    தமிழ்நாட்டில் எந்தவொரு குற்றச்செயலையும் சட்டத்தின் மீதோ காவல்துறையின் மீதோ எந்தவித அச்சமுமின்றி சமூக விரோதிகள் செய்யத் துணிந்துவிட்டனர். இந்த ஆட்சியும் அதற்கேற்றாற்போலவே சட்டம் ஒழுங்கின் மீது எந்த அக்கரையுமின்றி கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது.

    ஜெயக்குமார் தன்சிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் சட்டம் ஒழுங்கை காக்க ஆக்கப்பூர்வத்துடன் செயல்படுமாறு விடியா அரசின் பொம்மை முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்
    • ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

    "மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

    ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • வெள்ள நிவாரண தொகையாக தமிழ்நாடு அரசு கேட்டது ரூபாய் 38,000 கோடி
    • உள்துறை அமைச்சகம் தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 276.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வருபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "ஒன்றிய உள்துறை அமைச்சகம் மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூபாய் 115.49 கோடியும், டிசம்பர் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 160.61 கோடியும் ஆக மொத்தம் ரூபாய் 276.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ஆனால், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூபாய் 682.63 கோடி.

    இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் உள்ள இருப்பு தொகையான ரூபாய் 406.57 கோடியை கழித்தது போக மீதியுள்ள தொகையான ரூபாய் 276.10 கோடி தான் தற்போது தமிழ்நாட்டிற்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.

    நாம் கேட்ட நிவாரண நிதி ரூபாய் 38,000 கோடி.

    ஆனால், மாநில பேரிடர் நிவாரண நிதியில் ஏற்கனவே இருந்த 406.57 கோடியை விடுவித்து மீதியுள்ள ரூபாய் 276.10 கோடியை தான் தமிழகத்திற்கு நிவாரண நிதியாக ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

    தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை ஒதுக்காமல் மாநில பேரிடர் நிவாரண நிதியாக ஏற்கனவே இருக்கிற தொகையை கழித்து விட்டு மீதி தொகையை உள்துறை அமைச்சகம் ஒதுக்கியிருப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

    இதன்மூலம் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் நாம் கேட்ட தொகையை ஒதுக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு மறுத்தது தெளிவாக தெரிகிறது. இந்த ஒதுக்கீடு யானைப் பசிக்கு சோளப் பொரி போட்டது போல் இருக்கிறது.

    எனவே, தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரண நிதி வழங்காத பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக பேசுவது அப்பட்டமாக நீலிக் கண்ணீர் வடிப்பதாகத் தான் கருத முடியும்.

    தமிழக மக்கள் மீதோ, தமிழக வாழ்வாதாரத்தின் மீதோ கொஞ்சம் கூட கருணை காட்டாத அணுகுமுறையை தான் பிரதமர் மோடி கையாண்டு வருகிறார் என்பதற்கு உள்துறை அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடு மேலும் உறுதி செய்கிறது. இத்தகைய வஞ்சிக்கிற ஒன்றிய பா.ஜ.க.

    அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • 2015ல் இருந்து ரூ.1.5 லட்சம் கோடி கேட்டுள்ளோம், ஆனால் ரூ.7000 கோடி தான் கொடுத்துள்ளனர்.
    • மத்தியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பாராமுகமாக செயல்படுகிறது.

    சென்னை

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    யானைப் பசிக்கு சோளப்பொறி போல புயல் பாதிப்பிற்கு நிவாரணம் மத்திய அரசு வழங்கி உள்ளது.

    2015ல் இருந்து ரூ.1.5 லட்சம் கோடி கேட்டுள்ளோம், ஆனால் ரூ.7000 கோடி தான் கொடுத்துள்ளனர்.

    வட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டால் வாரி வழங்குகிறார்கள்.

    மத்தியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பாராமுகமாக செயல்படுகிறது.

    தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் நடத்துகிறது என்று கூறினார்.

    • வெறுப்பு அரசியல், மத துவேச பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது.
    • சசிகலா எழுதியதாக சொல்லப்படும் கடிதம், வெற்று கடிதம்.

    சென்னை:

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    * சென்னையில் பலரின் பெயர்கள் விடுபட்டுள்ளன.

    * பலர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாமல் திரும்பினர்.

    * வாக்குப்பதிவு சதவீத குளறுபடி, தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

    * என்னுடைய குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை.

    * வெறுப்பு அரசியல், மத துவேச பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது.

    * பிரதமரின் மத துவேச பேச்சுகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

    * சசிகலா எழுதியதாக சொல்லப்படும் கடிதம், வெற்று கடிதம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தென்சென்னை பாராளுமன்ற வேட்பாளர் ஜெயவர்தன், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் இருந்தனர்.

    • நான் 25 ஆண்டுகள் முடிசூடா மன்னனாக ராயபுரத்தில் இருந்து வந்தேன். பா.ஜ.க-வால்தான் தோற்றேன் - ஜெயக்குமார்
    • 2019-லும் சரி 2021-லும் சரி நாங்கள் நாங்கள் தோற்றது பா.ஜ.க-வால்தான் பா.ஜ.க-வால்தான் - ஜெயக்குமார்

    சென்னையில் இன்று அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்று பாஜகவினர் கூறுகிறார்களே என்று செய்தியாளர் ஒருவர் கேட்க அதற்கு ஜெயக்குமார் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

    "பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததால் தான் எங்களுடைய ஆட்சியே போனது. இல்லையென்றால் நான் ஜெயித்திருப்பேன், ராயபுரத்தில் நான் எல்லாம் தோற்க்கிற ஆளா, நான் மனம் திறந்து சொல்கிறேன், இதுவரை சொல்லவில்லை. நான் 25 ஆண்டுகள் முடிசூடா மன்னனாக ராயபுரத்தில் இருந்து வந்தேன். தோல்வி என்பதையே அறியாதவனாக இருந்தேன்; நான் யாரால் தோற்றேன், பா.ஜ.க-வால்தான் தோற்றேன்.

    பா.ஜ.க இல்லை என்றால் நான் எல்லாம் இந்நேரம் சட்டமன்றத்திற்கு போயிருக்க வேண்டிய ஆள். பா.ஜ.க இருந்ததனால் என் தொகுதி ராயபுரத்தில் 40,000 சிறுபான்மை இன மக்கள் ஓட்டு போனது. இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் ஓட்டு போனது; அவர்களுக்கு என் மேல் கோபம் கிடையாது. அப்போதே அவர்கள் என்னிடம் சொன்னார்கள். பா.ஜ.க-வை கழட்டி விடுங்கள் என்று சொன்னார்கள். நான் சொன்னேன் வீண் சுமைதான் என்று சொன்னேன். சமயம் வரும்போது கழட்டி விட்டுவிடுவோம், நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று சொன்னேன். அதே மாதிரி நேரம் வந்தது கழட்டி விட்டுவிட்டோம்.

    பா.ஜ.க இல்லை என்றால் நான் எல்லாம் ஜெயித்து இருக்க வேண்டிய ஆள். 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்திருப்பேன்; பாஜக இருந்ததால் இப்பொழுது நான் ஜீரோவில் இருந்து ஓடுகிறேன். தி.மு.க நாற்பதில் இருந்து ஓடுகிறார்கள் அப்படி என்றால் யார் முன்னாடி செல்வார்கள், இதுதான் காரணம். தமிழ்நாடு முழுக்க பார்த்தீர்கள் என்றால் 2019-லும் சரி 2021-லும் சரி நாங்கள் நாங்கள் தோற்றது பா.ஜ.க-வால்தான் பா.ஜ.க-வால்தான்" என்று கூறினார்.

    பாஜக குறித்து ஜெயக்குமார் பேசியது தொடர்பாக வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ்-யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தற்கு பதில் அளித்த அவர், "கடந்த தேர்தலில் பா.ஜ.க-வால்தான் கொஞ்ச ஓட்டாவது ஜெயக்குமார் வாங்குனாரு, இல்லைனா சுத்தமா அவுட் ஆகியிருப்பாரு." என்று பதிலடி கொடுத்துள்ளார்.

    • எனது தொகுதியான ராயபுரத்தில் கிறிஸ்துவர், இஸ்லாமியர் என 40 ஆயிரம் சிறுபான்மையினர் ஓட்டுகள் இருந்தது.
    • பாஜக இல்லை என்றால் நாங்கள் தான் 40 தொகுதியிலும் வெற்றி பெற்றிருப்போம் என்பதை உறுதியாக கூறுகிறேன்.

    சென்னையில் செய்தியாளர் சந்திப்பின் போது அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் கூறியதாவது:

    2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்று பாஜகவினர் கூறுகிறார்களே என்று செய்தியாளர் ஒருவர் கேட்க, அதற்கு ஜெயக்குமார் "இவர்களுடன் கூட்டணி வைத்ததால் தான் எங்கள் ஆட்சியே பறிபோது என்றும், இல்லையென்றால் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம்.

    நானெல்லாம் ராயபுரத்தில் தோற்கிற ஆளா? நான் இப்போது மனம் திறந்து சொல்கிறேன். 25 ஆண்டுகளாக முடிசூடா மன்னனாக இந்த ராயபுரத்தில் இருந்தேன். தோல்வி என்பதையே அறியாத ஆள் நான். பாஜகாவால் தான் தோற்றேன். பாஜகா என்று ஒன்று இல்லை என்றால் நானெல்லாம் சட்டமன்றத்தில் இருந்திருப்பேன். எனது தொகுதியான ராயபுரத்தில் கிறிஸ்துவர், இஸ்லாமியர் என 40 ஆயிரம் சிறுபான்மையினர் ஓட்டுகள் இருந்தது. என் மீது எனது தொகுதி மக்களுக்கு எந்தவித கோபமும் கிடையாது. அப்போதே என் தொகுதி மக்கள் கூறினார்கள் பாஜகவை கழட்டி விட்டுவிடுங்கள் என்று, நான் சொன்னேன் வேஸ்ட் லக்கேஜ் தான்.. வேறு என்ன செய்வது.. சமயம் வரும் போது கழட்டி விட்டுவிடுவோம் என்று கூறினோம் அதே போல் இப்போது கழட்டி விட்டுவிட்டோம். பாஜக வேஸ்ட் லக்கேட், அந்த பேட்டி இனிமேல் ஓடாத பேட்டி, ஓடாத வண்டி, பழைய மோட்டார் சைக்கில் என்று நினைத்து கழட்டி விட்டுவிட்டோம். பாஜக இல்லை என்றால் நாங்கள் தான் 40 தொகுதியிலும் வெற்றி பெற்றிருப்போம் என்பதை உறுதியாக கூறுகிறேன்.

    • நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • நேர்காணலுக்காக முன் கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறுமாறு திருச்சி மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், நளினி உள்பட 7 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு முன்கூட்டியே விடுவித்தது.

    முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை குடிமகன் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இவர்கள், இலங்கை மற்றும் இங்கிலாந்து செல்ல சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்று நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, முருகன் உள்ளிட்டோருக்கு பாஸ்போர்ட் வாங்குவதற்கு நேர்காணலுக்காக முன் கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறுமாறு திருச்சி மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் ஆர்.முனியப்பராஜ், முருகனின் நேர்காணலுக்காக நாளை அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்ததாகவும் நாளை அவர்களையும் அழைத்துச் செல்ல உள்ளதாகவும் கூறினார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    நாளை அதிகாலை 5 மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு 11.30 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும் கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். 

    ×