என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • எரிமலைக் குழம்புகளும், போர்க்களக் காட்சிகளும் மெய்சிலிர்ப்பு ரகம்.
    • அவரது குத்தும் பார்வையும் கூர்மையான உடல்மொழியும் திரையை ஆட்கொள்கிறது.

    டைட்டானிக் மூலம் உலகப் புகழ் பெற்றவர் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் காம்ரூன்.

    தனது படங்களில் பிரமாண்டத்திற்காக அறியப்படும் கேமரூன் 2009 இல் ஒரு படத்தை இயக்கி வெளியிடுகிறார். அதுதான் 'அவதார்'.

    ஒரு திரைப்படத்தில் இவ்வளவு பிரமாண்டத்தை அதுவரை யாரும் பார்த்ததே இல்லை என்ற அளவுக்கு அவ்வளவு நுட்பமான காட்சி அமைப்புகள், நவீன VFXகள் என அப்படம் அமைந்தது.

    2154 ஆம் ஆண்டில் பண்டோரா எனும் கிரகத்தில் வசிக்கும் நவி இன மக்களைப் பற்றி ஆராய சென்று அவர்களில் ஒருவனாக மாறும் ஹீரோ ஜேக் சல்லி, அவர்களுக்காக தனது சொந்த மனித இனத்தையே எதிர்த்து போராடுவதாக படம் அமைந்திருந்தது.நெய்த்திரி என்ற நவி பெண்ணின் மீதான ஜேக் சல்லியின் காதலே இப்படத்தை நகர்த்தும் அச்சாணி.


    இப்படம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு பெரும் வெற்றியை பெற்று கிளாசிக் ஆனது. தொடர்ந்து கடந்த 2022 இல் அவதார் 2 ஆம் பாகமான தி வே ஆப் வாட்டர் வெளியானது.

    இது முதல் பாகம் அளவு கொண்டாடப்படவில்லை எனினும் முதலாமதை போலவே அதன் பிரமாண்ட காட்சிகளுக்காக போற்றப்பட்டது.

    இந்நிலையில் அவதார் சீரிஸ் உடைய கடைசி பாகமான ஃபயர் அண்ட் ஆஷ் கடந்த 18 ஆம் தேதி வெளியாகி உள்ளது.

    கதை:

    முதல் பாகத்தில் காடு, இரண்டாம் பாகத்தில் கடல் என நம்மை வியக்க வைத்த கேமரூன், இந்த மூன்றாம் பாகத்தில் பண்டோரா கிரகத்தின் எரிமலைப் பிரதேசங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.

    அங்கு வசிக்கும் 'மாங்குவான்' எனப்படும் புதிய நவி இன மக்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் மற்ற நவி இனத்தவரைப் போல அமைதியானவர்கள் அல்ல.

    மாறாக வன்முறையும், பொறாமையும் கொண்டவர்களாகக் காட்டப்படுகிறார்கள். இவர்களே சாம்பல் மக்கள் (Ash people) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் தலைவி வராங் இந்த பாகத்தின் முக்கிய வில்லி ஆவார்.

    இந்த பாகத்தில், ஜேக் சல்லி மற்றும் நெய்த்திரி தங்கள் குழந்தைகளைக் காக்கவும், மனிதர்களின் ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் மீண்டும் போராடுகிறார்கள்.

    இவர்களுக்கு எதிராக மனிதர்களும், சாம்பல் மக்களும் கைகோர்ப்பது ஜேக்கின் குடும்பத்திற்குப் பெரும் சவாலாக அமைகிறது.

    இந்த சவாலை அவர்கள் முறியடித்தனரா என்பதே படத்தின் கதை. படத்தின் முதல் ஒரு மணி நேரம் கதை நகராமல் மிகவும் மெதுவாகச் செல்வது பலவீனமாகக் கருதப்படுகிறது. இரண்டாம் பாதியில் குடும்ப சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக உள்ளன.

    காட்சி அமைப்பு:

    படத்தின் மிகப்பெரிய பலமே அதன் VFX மற்றும் 3D தொழில்நுட்பம்தான். ஒவ்வொரு காட்சியும் மெனக்கிட்டு செதுக்கப்பட்டுள்ளது. எரிமலைக் குழம்புகளும், போர்க்களக் காட்சிகளும் மெய்சிலிர்ப்பு ரகம்.

    மலைக்க வைக்கும் அளவு, 3 மணி நேரம் 17 நிமிடங்கள் ஓடும் வகையில், வழக்கமான கதைக்களத்தை வடிகட்டிய எடுத்த அவதார் 3, அதன் காட்சி பிரமாண்டத்திற்காக மட்டுமே வொர்த் என்று கூறமுடியும். இந்தப் படத்தை பெரிய திரையில் பார்த்தால் மட்டுமே அதன் முழுமையான அனுபவத்தைப் பெற முடியும்.

    நடிகர்கள்:

    ஹீரோ ஜேக் சல்லியாக சாம் வொர்திங்டன் தந்தையாகவும், தலைவனாகவும் முதல் 2 பாகத்தை விட முதிர்ச்சி காட்டி உள்ளார். நெய்த்திரியாக நடித்த ஜோ சால்டனா அன்பிலும் ஆக்ஷனிலும் சமமாக ஆதிக்கம் செலுத்துகிறார்.

    நெருப்பு உலகத்தின் சாம்பல் மனிதர்களின் தலைவியாக வரும் வில்லி வராங் கதாபாத்திரத்தில் ஷ்பானிஷ் நடிகை ஊனா சாப்ளின் சொல்லி அடித்திருக்கிறார். அவரது குத்தும் பார்வையும் கூர்மையான உடல்மொழியும் திரையை ஆட்கொள்கிறது.

    பின்னணி இசை:

    இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்த சைமன் ஃப்ரான்ங்க்லென் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

    சாம்பல் இன மக்கள் வரும் காட்சிகளில், ஆக்ஷன் காட்சிகளில் வரும் இசை ஈர்க்கிறது. குடும்ப சென்டிமென்ட்டிலும் இசையை பிழிந்திருக்கிறார் சைமன்!

    ஒட்டுமொத்தமாக அவதார் 3 ஒரு அருமையான காட்சி அனுபவம், கணிக்கக்கூடிய கதை அனுபவம். மொத்தத்தில் அவதார் 3 அறிவை விட புலன்களுக்கு ஒரு விருந்து.

    மாலைமலர் ரேட்டிங் : 3 / 5

    • விநாயக் மகாதேவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.
    • இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார்.

    2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

    இன்ஸ்பக்டர் விநாயக் மகாதேவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார். ஒரு கடத்தல்காரனை தப்பிக்க விட்டதற்காக அவரை ச்ஸ்பண்ட் செய்து விடுவார்கள். அப்பொழுது அவர் ஒரு கும்பலை சந்திக்கிறார். அவர்கள் 500 கோடி ரூபாய் பணத்தொகையை கடத்த திட்டம் போடுகிறார்கள். அதற்கு அஜித் உதவுவதாக கூறுவார் அதற்கு அடுத்து என்ன நடந்தது என்பதே கதைக்களம்.

    இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். படத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும். படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.

    இந்நிலையில், மங்காத்தா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய பட்க்குழு திட்டமிட்டுள்ளனர். ஜனவரி மாதம் 23 ஆம் தேதி படம் ரீரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதுமாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் கிங்மேக்கர் என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • இவர் இயக்கிய பல படங்கள் மாநில மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது.
    • தமிழில் வெளியான “லேசா லேசா” படத்தில் இவர் நடித்த நகைச்சுவை கதாப்பாத்திரம் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும்.

    மலையாள திரையுலகின் பிரபல நடிகரும், இயக்குநருமான நடிகர் ஸ்ரீனிவாசன் உடல் நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69.

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மட்டனூர் அருகே உள்ள பாட்டியம் பகுதியில் 1956-ம் ஆண்டு பிறந்த ஸ்ரீனிவாசன், 1977-ம் ஆண்டு "மணி முழக்கம்" என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமா துறையில் நுழைந்தார். பள்ளி ஆசிரியர் மற்றும் இல்லத்தரசியின் மகனான இவர் பொருளாதாரம் இளங்கலை பட்டதாரி ஆவார்.

    சினிமா துறைக்கு வருவதற்கு முன்பாக சென்னையில் உள்ள தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் முறையான திரைப்பட பயிற்சி பெற்றவர். அவர் நடித்த முதல் படத்திலேயே தனது தனிப்பட்ட நடிப்பின் மூலமாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

    அதன்பிறகு மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்த இவர், மலையாள சினிமாவின் மதிக்கப்படும் நடிகர்களில் ஒருவரானார். 225 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீனிவாசன், சமூகத்தில் நடக்கும் விஷயங்களை தனது காமெடி வாயிலாக வெளிப்படுத்தி ரசிகர்களால் கவரப்பட்டவர்.

    மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமாக்களிலும் நடித்துள்ள அவர், தனது நகைக்சுவை நடிப்பால் தமிழக ரசிகர்களையும் கவர்ந்தவர். திரைப்பட துறையில் நடிப்பு மட்டுமின்றி, பல படங்களில் இயக்குனராகவும் இருந்துள்ளார். மேலும் திரைக்கதை எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் இயக்கிய பல படங்கள் மாநில மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது.

    தமிழில் வெளியான "லேசா லேசா" படத்தில் இவர் நடித்த நகைச்சுவை கதாப்பாத்திரம் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும். அவரது முக பாவணை மற்றும் நகைச்சுவை பேச்சு, அந்த படத்தில் இறுதிவரை ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கும். பாரதிராஜாவின் "ரெட்டச்சுழி" படத்திலும் நடித்திருக்கும் அவர் அப்போதே தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

    தனது தனித்துவமான நகைக்சுவை நடிப்பின் மூலம் மலையாள மற்றும் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீனிவாசன், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்தார். அவர் உதயம்பேரூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து சிகிச்சை பெற்றார்.

    டயாலிசிஸ் சிகிச்சைக்காக அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று வந்த படி இருந்துள்ளார். இந்தநிலையில் அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து திரிபுனித்துராவில் உள்ள தாலுகா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஸ்ரீனிவாசன் இன்று காலை 8.30 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது மறைவு மலையாள திரையுலகினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், ஸ்ரீனிவாசனின் மறைவு குறித்து கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ஆடியோவில், "எனது நல்ல நண்பர் ஸ்ரீனிவாசன் இனி இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியாக இருந்தது. நான் படித்த திரைப்படக் கல்லூரியில் அவர் என் வகுப்புத் தோழர். அவர் ஒரு சிறந்த நடிகர் மற்றும் மிகவும் நல்ல மனிதர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று கூறியுள்ளார்.

    • சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி’ இயக்குகிறார்.
    • இந்த பாடலுக்கு வரிகள் எழுதி விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

    சென்னை:

    விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். தற்போது இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்கி வரும் விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி' என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.

    சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி' இயக்குகிறார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    2கே தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், இப்படம் உருவாகி வருகிறது.

    இந்த நிலையில், இப்படத்தில் "லவ் அட்வைஸ்" என்ற பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாய உள்ளதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். இந்த பாடலுக்கு வரிகள் எழுதி விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

    • டிசம்பர் 25 வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
    • அவரது சினிமா வாழ்க்கைக்கு ஒரு மகத்தான அஞ்சலியாக இருக்கும்.

    பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திரா (89) கடந்த மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் நடித்த கடைசி படம் 'இக்கிஸ்' டிசம்பர் 25 வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

    'இக்கிஸ்' திரைப்படம் 1971 இந்தோ-பாக் போரில் பங்கேற்று 21 வயதில் வீரமரணமடைந்தவரும், பரம் வீர் சக்ரா விருது பெற்றவருமான அருண் கேத்ரபாலின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

    அந்தாதுன் போன்ற வெற்றிபடங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

    இந்தப் படத்தில், தர்மேந்திரா அருண் கேத்ரபாலின் தந்தை பிரிகேடியர் எம்.எல். கேத்ரபாலின் வேடத்தில் நடிக்கிறார். அருணின் வேடத்தில் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்திய நந்தா நடிக்கிறார்.

    இந்த படத்தின் இறுதி டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் படம் அவரது சினிமா வாழ்க்கைக்கு ஒரு மகத்தான அஞ்சலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

    • ராதிகா நடிப்பில் சாலி மொகாபாத் திரைப்படம் கடந்த டிசம்பர் 12 அன்று வெளியானது.
    • வீட்டில் உள்ள தாய், தங்கையிடம் இப்படித்தான் சொல்வீர்களா என்று கேட்க தோன்றும்.

    ஆல் இன் ஆல் அழகு ராஜாவின் கார்த்திக்கு ஜோடியாகவும், கபாலியில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்து தமிழ் ரசிகர்கர்களுக்கு பரீட்சயமானவர் நடிகை ராதிகா ஆப்தே.

    இவர் பிரகாஸ்ராஜின் தோனி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். மேலும் தெலுங்கில் பாலகிருஷ்ணா படத்திலும் அவர் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் ராதிகா ஆப்தே பிரதானமாக இந்தி சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

    ராதிகா நடிப்பில் சாலி மொகாபாத் திரைப்படம் கடந்த டிசம்பர் 12 அன்று வெளியானது.

    இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றியபோது ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

    அவர் கூறியதாவது, தென்னிந்தியாவில் பல நல்ல சினிமாக்கள் வருகின்றன. ஆனால் நான் பணியாற்றிய சிலவற்றில் சூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு சில சங்கடமான அனுபவம் ஏற்பட்டது. குறிப்பாக செட்டில் நான் ஒருத்தி மட்டுமே பெண்ணான இருக்கும் சமயங்களில் என்னை சுற்றி அனைவரும் ஆணாக இருக்கும்போது நிகழ்ந்தது.

    படத்தில் எடுப்பாக தெரிவதற்காக எனது மார்பகம் மற்றும் பின் பக்கத்தில் அதிக pad-களை வைக்க நிர்பந்திக்கப்பட்டேன்.

    அவர்கள் என்னிடம் வந்து, அம்மா, அதிக பேடிங் என்று கூறுவார்கள். எனக்கு ஒரு மாதிரி இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள தாய், தங்கையிடம் இப்படித்தான் அதிக பேடிங் வைக்க சொல்வீர்களா? என்று கேட்கத் தோன்றும். நான் இயக்குனரிடம் சென்று பேடிங் வேண்டாம் என்று சொல்லி விடுவேன்" என்று தெரிவித்தார்.

    அவர் நடித்த தென்னிந்திய படங்களில் பாலகிருஷ்ணா படத்தில் மட்டுமே ரோமாஸ் பாடல் மற்றும் கவர்ச்சியில் நடித்திருப்பதால் அவர் அந்த அனுபவத்தையே பகிர்கிறார் என்று பலரும் யூகிக்கின்றனர்.  

    • 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.
    • ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

    மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 69.

    கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீனிவாசன் இன்று மரணமடைந்தார்.

    நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் மலையாளம், தமிழ் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் எழுத்தாளர், நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராக அவரது பங்களிப்புகளுக்காக பல வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரங்கள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

    ஸ்ரீனிவாசனுக்கு விமலா என்ற மனைவியும், வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் என்ற மகன்களும் உள்ளனர். இருவரும் மலையாள சினிமாவில் முக்கிய நபர்களாக உள்ளனர். 

    • இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது.

    இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'மெர்சல்' படத்தையும் ஜீ தமிழ் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 



    • இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
    • கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அரசன்'. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'அரசன்' படத்தில் நடிகை யோகலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மற்றும் 'ஹார்ட் பீட்' தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை யோகலட்சுமி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    யுவன் சங்கர் ராஜா இசையில் 2 பாடல்கள் மட்டுமே ரசிக்க முடிகிறது.

    மதுரை அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வரும் சரத்குமார் ஊரில் நல்லது கெட்டது விஷயங்களில் கலந்து கொண்டு பெரிய மனிதராக வாழ்ந்து வருகிறார். அதே ஊரில் தாய் தந்தையை இழந்த சிறுவன் சண்முக பாண்டியன், சரத்குமாரை ஒரு சிறிய சண்டையில் காப்பாற்றுகிறார். அதிலிருந்து சரத்குமார் உடனே பயணிக்கிறார் சண்முக பாண்டியன்.

    இருவரும் ஊரில் கஞ்சா கடத்தி விற்று சம்பாதித்து வருகிறார்கள். போலீஸ்காரர்களின் சூழ்ச்சியால் சண்முக பாண்டியன் கஞ்சாவுடன் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறார். இதனால் கோபமடையும் சரத்குமார் போலீஸ் நிலையத்தை எரித்து சண்முக பாண்டியனே வெளியில் கொண்டு வந்து விடுகிறார்.

    இறுதியில் போலீஸ் இவர்களை பிடித்தார்களா? சரத்குமார், சண்முக பாண்டியன் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தில் கெத்தான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சரத்குமார். ஊருக்காக போராடுவது, சண்முக பாண்டியன் மீது பாசம், அவருடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி மற்றும் வெகுளித்தனமான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்.

    நாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியன், காதல், ஆக்ஷன், நடனம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் தரணிகா போலீஸ் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

    இயக்கம்

    வைகை அணை கட்டும் போது பல கிராமங்கள் செழிப்பானாலும், சில கிராமங்கள் பாதிக்கப்பட்டது. இதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பொன்ராம். ஆனால், வைகை அணை பற்றி அதிகம் பேசாமல், கமர்ஷியல் படத்திற்கு தேவையான அனைத்தும் வைத்து எடுத்து இயக்கி இருக்கிறார்.

    விவசாயம் பற்றி சில வசனங்கள் மூலம் மேலோட்டமாக சொல்லி இருக்கிறார். முதல் பாதி திரைக்கதை சுமாராகவும், இரண்டாம் பாதி திரைக்கதை விறுவிறுப்பாகவும் நகர்த்தி இருக்கிறார். காமெடி காட்சிகள் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை.

    இசை

    யுவன் சங்கர் ராஜா இசையில் 2 பாடல்கள் மட்டுமே ரசிக்க முடிகிறது. பின்னணி இசையில் கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறார்.

    ஔிப்பதிவு

    பால சப்பிரமணியம் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் சிறப்பு.

    ரேட்டிங்- 2/5

    • புதுமுகங்கள் முயற்சியில் உருவாகும் படம்
    • படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன

    இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில், மாறுபட்ட கதைகளத்தில் உருவாகி வரும் படம் "ரேஜ்". இப்படத்தில் புதுமுகங்களான ஷான் நாயகனாகவும், ஷெர்லி பபித்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

    பவன் ஜினோ தாமஸ், ஆர்யன், பிரதோஷ், விக்ரம் ஆனந்த் ஆகியோர் வில்லன் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகர்களான சரவணன், முனிஷ்காந்த், ராமசந்திரன், மணிகண்டன், அஜித் கோஷி, காயத்ரி ரெமா, கிச்சா ரவி, காலா பீம்ஜி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

    சென்னையில் வாடகை கார் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் வாழ்வில் நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம், அவன் வாழ்க்கையையே மாற்றுவது தான் இப்படத்தின் மையக்கரு. சென்னை, கேரளா, பொள்ளாச்சி ஆகிய ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

    இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பராசக்தி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.

    ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளதாக கூறப்பட்டது.

    அதாவது, ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதி அன்று வெளியிடப்படுகிறது. அதனால், 4 நாட்களுக்கு பிறகு பராசக்தி ஜனவரி 14ம் தேதி அன்று திரைக்கு வருவதாக கூறப்பட்டது. பராசக்தியில் இதுவரை ரிலீஸ் தேதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

    என்றாலும், பராசக்தி படத்தை ஜனநாயகனுக்கு போட்டியாக முன்கூட்டியே வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதாவது, பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×