என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
சைபர் தாக்குதலுக்கு ஆளாகும் குழந்தைகள்- காரணம் இது தான்!
Byமாலை மலர்14 April 2022 7:25 AM GMT (Updated: 14 April 2022 7:25 AM GMT)
இந்தியா, மலேசியா உள்ள நாடுகளில் உள்ள குழந்தைகள் ஆன்லைன் பயமுறுத்தல்களை சமாளிக்கும் திறன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
உலக அளவில் 10-ல் 6 குழந்தைகள் சைபர் தாக்குதலுக்கு ஆளாவதாக சர்ப்ஷார்க் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் உள்ள குழந்தைகள் 8 முதல் 12 வயதுடையவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் தாக்குதல் கடந்த 2020ம் ஆண்டு 144 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் கொரோனா ஊரடங்கு காரணமாக குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது தான் என கூறப்படுகிறது.
2-ல் ஒரு குழந்தைகள் சைபர் வன்முறைக்கு ஆளாகிறார்கள், மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் பிஷ்ஷிங் அல்லது ஹாக்கிங்கிற்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1.2 கோடி குழந்தைகள் கடந்த மூன்று வருடங்களில் சைபர் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
குழந்தைகளுக்கு இணையம் குறித்த கல்வி அறிவை தரவேண்டிய கட்டாயத்தில் சமூகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வருமானம் வரும் நாடுகளை விட ஆசிய பசிபிக் நாடுகளில் உள்ள குழந்தைகள் ஆன்லைனில் வரும் பாதிப்புகளை சமாளிக்கக்கூடியதாக இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறியுள்ளது.
குழந்தைகள் மீதான சைபர் தாக்குதல் மூலம் ரூ.5.03 கோடி அளவிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா, மலேசியா உள்ள நாடுகளில் உள்ள குழந்தைகள் ஆன்லைன் பயமுறுத்தல்களை சமாளிக்கும் திறன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X