என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

ஏர்டெல்
முடங்கிய ஏர்டெல் நெட்வொர்க்: அவதிக்குள்ளான பயனாளர்கள்
தொழில் நுட்ப கோளாறால் ஏர்டெல் நெட்வொர்க் முடங்கியதால், பயனாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்தியாவில் ஏர்டெல் நெட்வொர்க் முதன்மையான நெட்வொர்க்கில் ஒன்றாக இருந்து வருகிறது. கோடிக்கணக்கானோர் பிராட் பேண்ட், செல்போன் மூலம் இணைய தள வசதி பெற்று வருகிறார்கள். தற்போது பெரும்பாலானோர் வீட்டில் இருந்து வேலை செய்து வருவதால் நெட்வொர்க் இன்றியமையாததாக உள்ளது.
இந்தநிலையில் இந்தியா முழுவதும் இன்று காலை 11 மணியளவில் ஏர்டெல் நெட்வொர்க் முற்றிலும் டவுன் ஆனது. தொழில்நுட்ப காரணத்தால் பயனாளர்கள் நெட்வொர்க் வசதியை பெற முடியாமல் தவித்தனர்.
இதனால் மற்ற சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதன்பின் ஏர்டெல் நிறுவனம் தொழில்நுட்ப கோளாறை சரி செய்தது.
Next Story






