என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
அதிரடி சலுகை விற்பனையில் இத்தனை கோடிகளுக்கு வியாபாரமா?
Byமாலை மலர்23 Oct 2020 7:52 AM GMT (Updated: 23 Oct 2020 7:52 AM GMT)
முன்னணி ஆன்லைன் விற்பனையாளர்கள் நடத்திய பண்டிகை கால விற்பனையில் பல ஆயிரம் கோடிகளுக்கு வியாபாரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் இதர ஆன்லைன் விற்பனையாளர்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு அசத்தல் சலுகைகளுடன் சிறப்பு விற்பனையை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற பண்டிகை கால விற்பனையில் இந்த நிறுவனங்கள் சுமார் ரூ. 47 ஆயிரம் கோடி வருவாயை அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஈட்டும் என நுகர்வோர் செலவீனம் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் கணித்து இருக்கிறது.
மேலும் இந்த தொகையில் கிட்டத்தட்ட 75 சதவீதம் அதாவது ரூ. 35,400 கோடிகள் அக்டோபர் 15 முதல் அக்டோபர் 21 வரையிலான காலக்கட்டத்தில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையிலேயே நுகர்வோர் செலவு செய்து இருக்கலாம் என தெரிவித்து இருக்கிறது.
சமீபத்திய ஆன்லைன் விற்பனைகளில் சுமார் 5.5 முதல் 6 கோடி பயனர்கள் கலந்து கொண்டிருப்பர் என்றும், இந்த ஆண்டு பண்டிகை கால விற்பனை அதிகபட்சம் 34 சதவீத வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் அதிகம் விரும்பப்படும் சாதனமாக இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X