என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
இன்டெல் நிறுவனத்தை தொடர்ந்து பிராட்காம் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்ட நோக்கியா
Byமாலை மலர்17 Jun 2020 10:44 AM GMT (Updated: 17 Jun 2020 10:44 AM GMT)
இன்டெல் நிறுவனத்தை தொடர்ந்து பிராட்காம் நிறுவனத்துடன் நோக்கியா புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஃபின்லாந்தை சேர்ந்த நோக்கியா ஸ்மார்ட்போன் பிராண்டு 5ஜி வசதி கொண்ட சிப்செட்களை உருவாக்கி விநியோகம் செய்ய பிராட்காம் நிறுவனம் ஒப்பந்தமிட்டுள்ளது. இதன் மூலம் இன்டெல் மற்றும் மார்வெல் நிறுவனங்களை தொடர்ந்து நோக்கியாவுடன் இணைந்திருக்கும் மூன்றாவது நிறுவனமாக பிராட்காம் இருக்கிறது.
புதிய ஒப்பந்தத்தின் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் நோக்கியா வெளியிடும் 5ஜி ஸ்மார்ட்போன்களில் சுமார் 35 சதவீதம் மாடல்களில் பிரத்யேக சிப்செட் வழங்க முடியும் என நோக்கியா எதிர்பார்க்கிறது.
இதுதவிர தற்போதைய சந்தை சூழ்நிலை அதிவேகமாக வளர்ந்து வருவதால், நோக்கியா நிறுவனமும் தனது பணிகளை முடுக்கி விடும் நோக்கில் புது நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்க காரணியாக பார்க்கப்படுகிறது. பிராட்காம் உடனான கூட்டணியில் நோக்கியா நிறுவனம் Application-Specific Integrated Circuit அல்லது ASIC தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது.
இது அதிவேக செயல்பாட்டை வழங்குகிறது. எனினும், கட்டணம் மற்றும் விநியோக சவால்கள் போன்ற காரணங்களால் நோக்கியா ASIC தொழில்நுட்பத்தை பயன்படுத்து எனும் முடிவை எட்டியிருப்பதாக தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X