என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
ரூ. 43 ஆயிரம் கோடிகளை கொடுத்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவன பங்குகளை வாங்கிய ஃபேஸ்புக்
Byமாலை மலர்22 April 2020 6:04 AM GMT (Updated: 22 April 2020 6:04 AM GMT)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் ரூ. 43 ஆயிரம் கோடிக்கு வாங்கி இருக்கிறது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அங்கமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிட்டெட் நிறவனத்தின் 9.99 சதவீத பங்குகளை வாங்கி இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ. 43 ஆயிரம் கோடி (ரூ. 43,574 கோடி) கொடுத்திருக்கிறது.
நிறுவனம் ஒன்றின் மிக குறைந்த அளவு பங்குகளை வாங்க இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்திருக்கும் உலகின் முதல் நிறுவனமாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதுதவிர இந்திய தொழில்நுட்ப துறையின் மிகப்பெரும் அந்நிய நேரடி முதலீட்டாளராகவும் ஃபேஸ்புக் இருக்கிறது.
முதலீட்டின் அங்கமாக ஜியோ ஃபிளாட்பார்ம்ஸ், ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் வாட்ஸ்அப் போன்றவை வணிக ரீதியில் கூட்டணி அமைத்து இருக்கின்றன. இந்த கூட்டணியில் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் புதிய வணிக வியாபாரமான ஜியோமார்ட் தளத்தை வாட்ஸ்அப் கொண்டு ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் கொண்டு ஜியோமார்ட் மூலம் மக்களின் வீடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை சீராக வழங்க ஏதுவாக இருநிறுவனங்களும் பணியாற்றும் என கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X