என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
48 எம்.பி. சென்சார் மற்றும் நான்கு கேமராவுடன் அறிமுகமாகும் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்13 Nov 2019 11:03 AM GMT (Updated: 13 Nov 2019 11:03 AM GMT)
ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் 48 எம்.பி. சென்சார் மற்றும் நான்கு கேமரா வழங்கப்படுகிறது.
ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை ப்ளிப்கார்ட் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறது.
இதுதவிர புதிய ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி சென்சார் மற்றும் நான்கு கேமராக்கள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் கைரேகை சென்சாரும் வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசரின்படி புதிய ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனில் டெலிபோட்டோ கேமராவும் வழங்கப்படலாம் என தெரிகிறது.
இந்தியாவில் நவம்பர் 20 ஆம் தேதி ரியல்மி எக்ஸ்20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதே நிகழ்வில் ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன் RMX1925 எனும் மாடல் நம்பரில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X