என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
ஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்12 Nov 2019 11:32 AM GMT (Updated: 12 Nov 2019 11:32 AM GMT)
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சியோமி நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாக சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஐந்து சென்சார்கள் கொண்ட பாப் அப் கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இவை பயனர் வைத்திருப்பதை பொருத்து பிரைமரி அல்லது செல்ஃபி கேமரா என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஸ்மார்ட்போனின் வரைபடங்களின் படி இதில் மெல்லிய பெசல்கள், டிஸ்ப்ளே நாட்ச் இல்லாதது தெளிவாக தெரிகிறது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்ட காப்புரிமைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, கடந்த வாரம் அச்சிடப்பட்டுள்ளது. காப்புரிமையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் பாப்-அப் தெரிகிறது.
இவைதவிர சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. முன்னதாக நோக்கியா 9 பியூர்வியூ ஸ்மார்ட்போன் ஐந்து கேமராக்களுடனும் சியோமி Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஐந்து கேமரா சென்சார்களுடன் அறிமுகம் செய்யப்பட்டன.
சியோமி Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல் லென்ஸ் 5X டெலிபோட்டோ லென்ஸ் போன்று செயல்படுகிறது. இத்துடன் 12 எம்.பி. சென்சார், 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் மற்றும் டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 6.47 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 5260 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X