search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    புது லேப்டாப் மற்றும் 4K டிவி மாடல்களை இந்தியா கொண்டு வரும் சியோமி
    X

    புது லேப்டாப் மற்றும் 4K டிவி மாடல்களை இந்தியா கொண்டு வரும் சியோமி

    • சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஸ்மார்ட் டிவி, அக்சஸரீஸ், லேப்டாப் என ஏராளமான சாதனங்களை விற்பனை செய்து வருகிறது.
    • இந்த வரிசையில் புது சாதனங்கள் வெளியீட்டை அடுத்த வாரம் நடத்த சியோமி முடிவு செய்து இருக்கிறது.

    சியோமி இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி இந்திய சந்தையில் புது சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே நிகழ்வில் சில புது சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக சியோமி அறிவித்து உள்ளது. இந்த வரிசையில், சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவி X சீரிஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.


    புது சாதனங்கள் வெளியீட்டுக்கான டீசர்களில் நோட்புக் ப்ரோ 120ஜி மாடல் அதிவேகமாகவும், சிறப்பாகவும் இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. டீசர் புகைப்படங்களின் படி இந்த லேப்டாப் தோற்றத்தில் 2021 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இந்த லேப்டாப்பில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் குறித்து சியோமி எந்த தகவலையும் வழங்கவில்லை.

    பெயரை வைத்து பார்க்கும் போது இந்த நோட்புக்கில் 120 ஜி என்ற குறியீடு 120Hz ஸ்கிரீன் வழங்கப்படுவதை குறிப்பிடலாம் என தெரிகிறது. புதிய ரெட்மி நோட்புக் அம்சங்கள் பற்றி சியோமி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இந்த லேப்டாப் ரெட்மிபுக் ப்ரோ 15 மாடல் ரெட்மி புக் ப்ரோ மாடலின் சற்றே ட்வீக் செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.

    Next Story
    ×