search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹைமாஸ் விளக்கு"

    தட்டாஞ்சாவடி காலனியில் எரியாத ஹைமாஸ் விளக்குகளுக்கு மலரஞ்சலி செலுத்தி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    தட்டாஞ்சாவடி தொகுதி பாக்குமுடையான்பட்டு ஜீவா காலனியில் உள்ள ஹைமாஸ் விளக்கு, கிழக்கு கடற்கரை சாலையில் ராஜீவ்காந்தி சிலை வரை உள்ள 20-க்கும் மேற்பட்ட சோடியம் விளக்குகள் நீண்டகாலமாக எரியவில்லை.

    இதை சீரமைத்து விளக்குகளை எரிய வைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அரசும், மின்துறையும் கண்டு கொள்ளவில்லை. இதனால் விளக்குகளை எரிய வைக்க வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு தொகுதி செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுசெல்வம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஹேமலதா, எழிலன், கிளை செயலாளர்கள் தனஞ்செழியன், லோகு, பாலமுருகன், செந்தில், மூர்த்தி, சசி, சத்தியசீலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி எரியாத ஹைமாஸ் விளக்குகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    ×