search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பம் விநியோகம்"

    • மெக்கானிக் ஆட்டோபாடி ரிப்பேர் போன்ற பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் தகுதியுள்ளோர்க்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

    தருமபுரி,

    இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் அறிக்கையில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இளைஞர்களுக்கு பயனுள்ள வேலைவாய்ப்பு பெற்று தருவதற்கும், தொழிற்சாலைகளுக்கு ஏற்றவாறு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு உருவாக்கிடவும், 2023-ம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சேர 24.5.2023 முதல் 7.6.2023 வரை சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    வயர்மேன் பிரிவிற்கு 8-ம் வகுப்பிலும், ரெப்ரிஜிரேசன் AC டெக்னீசியன், பிட்டர், மெக்கானிக் ஆட்டோபாடி ரிப்பேர் போன்ற பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    சேர்க்கைக்கு வரும்பொழுது கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை, மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் மற்றும் முன்னுரிமை இருப்பின் அதற்கான சான்றிதழ் ஆகியன சான்றிதழ்களுடன் கொண்டு வரவேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் இதரக்கட்டணம் ரூ 245 ஆகும்.

    மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபட கருவி, காலணி, பஸ்பாஸ், மாதாந்திர உதவித் தொகை ரூ.750 மற்றும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் தகுதியுள்ளோர்க்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

    மேலும் பயிற்சி முடித்தபின் வளாகத் தேர்வு மூலம் முன்னனி நிறுவனங்களில் வேலைப் பெற்று பெற்று தரப்படும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சியும் வழங்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு அரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை 9443470656 என்ற கைபேசி மூலமாக தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சாந்தி,தெரிவித்துள்ளார்.

    ×