search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன ஓட்டிகள் புகார்"

    • புவனகிரி விருத்தாசலம் சாலையில் விருந்தினர்மாளிகையில் இருந்து வெள்ளாற்று பாலம் வரை சாலை குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகனஓட்டிகள் புகார்,
    • விபத்துக்கள் நடக்கிறதுஎன்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வருகின்றனர்

    கடலூர்:

    புவனகிரி விருத்தாச்ச லம் சாலையில் விருந்தி னர்மாளிகையில் இருந்து வெள்ளாற்று பாலம் வரை சாலை குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவு ஏற்பட்டு கனரக வாகனங்கள் இயக்குவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது  கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே இடத்தில் 2 விபத்துக்கள் நடைபெற்று இருவரும் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்தனர்.

    இதற்குகாரணம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமி ப்புகளை அகற்றாமல் பல்வேறு இடங்களில் சாலை சேதமடைந்து இருப்பதையும் சரி செய்யாமலும் இரு ப்பதால்தான் இது போன்ற விபத்துக்கள் நடக்கிறதுஎன்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வருகின்றனர் ஆகையால் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவலாகவும் தொ லைபேசி வாயிலாகவும் கடிதம் மூலமும் தெரிவித்தி ருப்பது தெரிய வந்தது. ஆகையால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் இதனை ஆய்வு மேற்கொண்டு இதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    ×