என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்"
- எதிர்பாராத விதமாக குட்டையில் தவறி விழுந்து இறந்தார்
- சிறுவனை தேடிய போது பிணமாக மிதந்தான்
வேலூர்:
பழைய காட்பாடியை சேர்ந்தவர் ராஜ்குமார். மளிகை கடை வைத்துள்ளார்.இவரது மகன் நிதிஷ்குமார் (வயது 4). நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிதீஷ் குமார் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தான்.
யாரும் பார்க்காததால் தண்ணீரில் மூழ்கிய சிறுவன் மூச்சுதிணறி இறந்தான். குழந்தையை காணவில்லை என தேடிய போது தொட்டியில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. காட்பாடி போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியானா மாநிலம் சண்டிகர் பகுதியை சேர்ந்தவர் குனல் கபூர் (21) வேலூர் அருகே உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று நண்பர்களுடன் கரிகிரி கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக குட்டையில் தவறி விழுந்து இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருவலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்