search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி ஊழியர் பலி"

    • வங்கி ஊழியரான இவர் மங்களூருவில் நடைபெற்ற வணிக மாநாட்டில் கலந்து கொள்ள வந்ததும் தெரியவந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிரபல தனியார் ஓட்டல் நீச்சல் குளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதாக மங்களூரு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கோபு ஆர்.நாயர் (38) என்பதும், வங்கி ஊழியரான இவர் மங்களூருவில் நடைபெற்ற வணிக மாநாட்டில் கலந்து கொள்ள வந்ததும் தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கோபு ஆர்.நாயர் நேற்று காலை 11 மணியளவில் ஓட்டலுக்கு வந்ததும் பின்னர் மாலை 4 மணியளவில் நீச்சல் அடிக்க சென்றபோது நீச்சல் குளத்தில் இறந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் குடிபோதையில் கட்டுப்பாட்டை இழந்து நீச்சல் குளத்தில் நீந்தியதால் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது.

    இதையடுத்து அந்த ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது குடிபோதையில் கோபு ஆர்.நாயர் நீச்சல் குளத்தில் இறங்கி குளித்தபோது இறந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் அவர் தங்கி இருந்த அறையிலும் காலி மதுபான பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மங்களூரு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×