search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேச சிறுவன்"

    • கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டதாக தகவல்.
    • வங்காளதேச பாதுகாப்பு படையினரிடம் சிறுவன் ஒப்படைப்பு.

    ஷில்லாங்:

    வங்காளதேசத்தை ஒட்டி அமைந்துள்ள மேகாலயா மாநிலத்தின் தெற்கு கரோ ஹில்ஸ் மாவட்ட எல்லைக்குள் சிறுவன் ஒருவன் சுற்றித் திரிந்துள்ளான். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் காணப்பட்ட அந்த சிறுவனை பிடித்த எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது வங்காளதேச நாட்டைச் சேர்ந்த தாம் வேண்டுமென்றே இந்த பகுதிக்குள் நுழையவில்லை என்றும், கவன குறைவாக வழி தவறி வந்து விட்டதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான்.

    இதையடுத்து நல்லெண்ண நடவடிக்கையாக, வங்காளதேச பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் அந்த சிறுவன் ஒப்படைக்கப் பட்டதாக இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். 


    இதுகுறித்து பேசிய இந்திய பாதுகாப்பு படை அதிகாரி பிரதீப் குமார், இது போன்று இந்திய பகுதிக்குள் நுழைபவர்கள் சிறார்களாகவும், அப்பாவிகளாகவும் இருக்கும் நிலையில் இரு அண்டை நாடுகளின் எல்லை பாதுகாப்பு படையினர் மனிதாபிமான அணுகுமுறையைக் கடைப்பிடித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

    இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்தவும், பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும் இது போன்ற பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ×