search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் போக்குவரத்து ரத்து"

    பாம்பன் ரெயில் பாலத்தில் கர்டர்களை தூக்கும் சக்கரத்தில் பழுது ஏற்பட்டதால் 3-வது நாளாக இன்றும் ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. #pambanBridge
    ராமேசுவரம்:

    மண்டபம் - ராமேசுவரத்தை இணைக்கும் வகையில் கடலில் 3 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் பாலத்தை 146 தூண்கள் தாங்குகின்றன. பாலத்தின் மத்தியில் கப்பல்கள் செல்ல வசதியாக தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மதுரை, காரைக்குடியில் இருந்து ரெயில்வே என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டு இரவு-பகலாக சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணி நேற்று வரை முடியவில்லை.

    இந்த நிலையில் பாலத்தின் உறுதித் தன்மையை சோதிக்கும் வகையில் நேற்று ராமேசுவரத்தில் இருந்து பாம்பனுக்கு 5 கி.மீ., 15 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனை தென்னக ரெயில்வே பாலம் தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு, மதுரை கோட்ட ரெயில்வே கூடுதல் மேலாளர் லலித் குமார்மனுஷ்கான் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது பாலத்தில் அதிர்வு ஏற்பட்டது. இதனால் ரெயிலை இயக்க தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். 3-வது நாளான இன்று பெங்களூரில் இருந்து ரெயில்வே என்ஜினீயர்கள் பாம்பனுக்கு வருகின்றனர். அவர்கள் முன்னிலையில் உறுதித்தன்மையை ஆய்வு செய்யும் சிறப்பு ரெயில் என்ஜின் பாம்பன் பாலத்தில் இயக்கப்பட உள்ளது. அதன் பின் ரெயில்கள் இயக்குவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

    இன்று 3-வது நாளாக பாம்பன் ரெயில் பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் காரணமாக 3-வது நாளாக இன்றும் ராமேசுவரத்துக்கு ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வழக்கமாக வடமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் ராமேசுவரத்துக்கு ரெயில் மூலம் வருவார்கள். பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக தற்போது மண்டபத்திலேயே ரெயில்கள் நிறுத்தப்படுவதால் அங்கிருந்து யாத்ரீகர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ்களில் ராமேசுவரம் செல்கின்றனர். இதனால் பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது. #pambanBridge
    ×