search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் இன்று முதல் இயக்கம்"

    • 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடவடிக்கை
    • பயணிகள் மகிழ்ச்சி

    வேலூர்:

    கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் நிறுத்தப்பட்ட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் ஈரோடு எக்ஸ்பி ரஸ் ரெயில் கடந்த 2 ஆண் டுகளுக்கு பிறகு மீண்டும் கடந்த வாரம் இயக்கப்பட்டது. பின்னர், ஈரோடு ரெயில் நிலையம் அருகே பராமரிப்பு பணிகள் காரணமாக மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது.

    காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை வரை செல்லும் மின்சார யூனிட் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருந் தது. ரெயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் 8 பொதுபெட்டி களுடன் முற்றிலும் முன்ப திவில்லா ரெயிலாக இன்று முதல் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.

    காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு இன்று காலை 9.30 மணிக்கு புறப் பட்டது. ஜோலார்பேட்டைரெயில் நிலையத்திற்கு காலை 11.45 மணிக்கு சென்றடைகிறது.

    ஜோலார் பேட்டையில் இருந்து காட்பாடி வரை செல்லும் மின்சார யூனிட் எக்ஸ்பிரஸ் ெரயில் (06418) இன்று முதல் பிற்பகல் 12.40 மணியளவில் ஜோலார் பேட்டையில் இருந்து புறப்படும்.

    இந்த ெரயில் காட்பாடி வந்தடைந்ததும் அப்படியே திருப்பதிக்கு இயக்கப்படுகிறது. பயணிகள் திருப்பதி வரை செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    கேத்தாண் டப்பட்டி, வாணியம் பாடி, விண்ணமங்கலம், ஆம்பூர், பச்சக்குப்பம், மேல்பட்டி, வளத்தூர், மேல்ஆலத்தூர், குடியாத் தம், காவனூர், விரிஞ்சி புரம், லத்தேரி ஆகிய 12 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. வழக்கம்போல் தினசரி இயக்கப்படும் இந்த ரெயிலால் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×