search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராட்சத மிதவை"

    • ராமகிருஷ்ணா நகர் அருகே கடற்கரையில் இரும்பிலான ராட்சத மிதவை ஒன்று கரை ஒதுங்கியது.
    • தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு எண்ணூர் போலீஸ் விரைந்து வந்து மிதவையை ஆய்வு செய்தனர்.

    எண்ணூர்:

    மாண்டஸ் புயல் காரணமாக எண்ணூர் பகுதியில் நேற்று முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கடலில் கிடந்த சிறிய அளவிலான கற்கள் மரங்களை சாலையில் தூக்கி வீசியது.

    இந்த நிலையில் இன்று ராமகிருஷ்ணா நகர் அருகே கடற்கரையில் இரும்பிலான ராட்சத மிதவை ஒன்று கரை ஒதுங்கியது. இது ராட்சத கேஸ் சிலிண்டர் போன்று காட்சியளித்ததால் பொதுமக்கள் பயந்து போய் எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு எண்ணூர் போலீஸ் விரைந்து வந்து அந்த மிதவையை ஆய்வு செய்தனர். அப்போது, கப்பல்களின் ராட்சத இரும்பு சங்கிலி மூலம் நங்கூரத்தில் கட்டப்பட்டு கடலில் மிதக்கும் மிதவை என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அங்கு கூடியிருந்த மக்களை அப்புறப்படுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ×