search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜராஜேஸ்வரி கோவில்"

    • யாக பூஜையை திருவள்ளூர் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் குருக்கள் இரா.ரவி தொடங்கி வைத்தார்.
    • கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், காக்களூர் பைபாஸ் சாலையில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் 9 யாக குண்டங்களுடன் கடந்த 14-ந் தேதி முதல் 5 கால விசேஷ ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

    இந்த யாக பூஜையை திருவள்ளூர் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் குருக்கள் இரா.ரவி தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து கஜ பூஜை, அஸ்வ பூஜை உடன் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையுடன் நடைபெற்றது.

    இன்று காலை 9 மணி முதல் மங்கள இசையுடன் திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு ஆகியவை நடந்தது. காலை 10.30 மணியளவில் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் கோபுரத்தின் விமான கலசத்திற்கு குருக்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினர்.

    அப்போது கோவிலை சுற்றி கூடி நின்ற திரளான பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கோவிலில் தொடர்ந்து 48 நாட்களுக்கு மூலமந்திர ஹோமங்களுடன் மண்டல பூஜைகள் நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வியாபாரிகள் நல சங்கம் ஒருங்கிணைப்பாளர் ஆர்யா சீனிவாசன், தலைவர் பி.சுரேஷ், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் அருள், தர்மலிங்கம், ரகுபதி, பக்தவச்சலம், பாலசுப்பிரமணியம், புஜ்ஜி பாபு, தசரத நாயுடு, ஜெகதீசன், பழனிபாபு, ஆர்.கருணாகரன் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

    ×