search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேடை உறுதிமொழி ஏற்பு"

    • காந்தி உருவசிலைக்கு மாலைவைத்து மரியாதை செலுத்தினர்.
    • மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    தருமபுரி,

    மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு சமூக நல்லிணக்க மேடை சார்பில் தருமபுரி எஸ்.வி. சாலையில் உள்ள மகாத்மா காந்தி உருவசிலைக்கு மாலைவைத்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் சமூக நல்லிணக்க மேடை பொறுப்பாளர் சிசுபாலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர் கந்தசாமி, சமூக நல்லிணக்க மேடை நிர்வாகி கார்த்திகேயன் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிங்காரவேல், ,விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மணடல செயலாளர் நந்தன்,மாவட்ட துணை செயலாளர் மின்னல் சத்தி,மாவட்டசெய்தி தொடர்பாளர் பாண்டியன், தொகுதிசெயலாளர் சக்தி(எ) சமத்துவன்,தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில பிரதிநிதி சாதிக்பாஷா,இந்திய தேசிய முஸ்லீம் லீக் மாவட்ட துணைத்தலைவர் சீராஷ்புதின்,இந்திய தேசிய லீக் இர்பான்பாஷா ,அருட்தந்தை ஜேசுதாஸ், மரியம் ஜோசப்,மக்கள் கண்காணிப்பகம் மாவட்ட அமைப்பாளர் செந்தில் ராஜா,ஆகியோர் பங்கேற்று பேசினர்.

    பின்னர் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    ×