search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதி உதிர்வு பிரச்சினை"

    • சிகைக்காய் உபயோகித்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.
    • தலைமுடியில் உள்ள வேர்களில் படுமாறு நன்றாக தேய்க்க வேண்டும்.

    முடி உதிர்வது என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் ஒரு சில சின்ன வெங்காயம் இருந்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கட்டிவிடலாம் என்று கூறப்படுகிறது.

    சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து அதில் தண்ணீர் சேர்க்காமல் பசை போல் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள சாறை பிழிந்து அதனை தலைமுடியில் உள்ள வேர்களில் படுமாறு நன்றாக தேய்க்க வேண்டும்.

    பத்து நிமிடம் மசாஜ் செய்த பின் ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு அதன் பிறகு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். கண் எரிச்சல் சிறிது இருந்தாலும் எந்த விதமான அலர்ஜியும் ஏற்படாது.

    இதனுடன் எலுமிச்சை சாறு அல்லது புதினா சேர்த்தும் தலையில் தடவலாம். தொடர்ந்து ஆறு மாதத்திற்கு இதை பயன்படுத்தி வருபவர்கள் முடி உதிர்வு குறைத்துள்ளதாக பல சமூக வலைதளங்களில் எழுதி பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போதைய நவநாகரிக உலகில் கூந்தலுக்கு ஷாம்புகள் போடுவதால் தான் முடி கொட்டும் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றும் சிகைக்காய் உபயோகித்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஷாம்புகள் அனைத்துமே ரசாயன கலப்புகள் இருக்கும் என்பதால் நமது பாரம்பரிய சிகைக்காய் தூளை பயன்படுத்தினால் உச்சந்தலை குளிர வைத்து உடல் சூட்டை குறைப்பது மட்டுமின்றி கூந்தலுக்கும் பளபளப்பை தரும் என்றும் முடி கொட்டும் பிரச்சனை இருக்காது என்றும் கூறப்படுகிறது.

    ஷாம்புகளை பயன்படுத்தினால் பக்க விளைவுகளை ஏற்படும் ஆனால் சிகைக்காய் பயன்படுத்தினால் எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×