search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாசி பெருந்திருவிழாவில் இன்று கொடியேற்றம்"

    • மாரியம்மன் உருவம்பொறித்த கொடி மரத்திற்கு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது
    • திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா வரும் மார்ச் 7-ம் தேதி நடைபெறுகிறது

    நத்தம்:

    நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7.29 மணிக்கு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தி கோவில் முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    இதில் கொடிமரம், நாணல்புல், மாவிலை, வண்ண பூமாலைகள் இணைத்து மாரியம்மன் உருவம்பொறித்த கொடி மரத்திற்கு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து மூலவர் மாரியம்மன் வெள்ளி மயில் வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து நாளை (செவ்வாய்கிழமை) அதிகாலையில் நத்தம் அருகே உள்ள கரந்தமலையில் கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக சந்தன கருப்புசுவாமி கோவிலில் பக்தர்கள் ஒன்று கூடுவார்கள். அங்கிருந்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர்.

    பின்னர் மஞ்சள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் தொடங்குவார்கள். தொடர்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா வரும் மார்ச் 7-ம் தேதி நடைபெறுகிறது. திருவிழா சமயங்களில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.

    ×