search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாசி பெருந்திருவிழா"

    • மார்ச் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
    • ஆன்மீக சமய மாநாட்டை அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர்

    நாகர்கோவில்:

    பிரசித்தி பெற்ற மண் டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி பெருந்திரு விழா வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30-க்கு உஷபூஜை நடக்கி றது. 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருக்கொ டியேற்றம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அம்ம னுக்கு பூஜை பொருட்கள் கொண்டுவருதல், 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6 மணிக்கு தங்கத் தேர் உலா, 6-8 ஸ்ரீ ராஜரா ஜேஷ்வரி பூஜையும், 10,001 திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது.

    கலை நிகழ்ச்சிகளாக 5-ந் தேதி காலை 9 மணிக்கு ஆன்மிக சமய மாநாடு நடக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞான சேகர் வரவேற்கிறார். குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை வகிக்கிறார். அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதா கிருஷ்ணன், மனோதங்கராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பேருரை யாற்றுகின்றனர்.

    விஜய்வசந்த் எம்.பி. பிரின்ஸ் எம்.எல்.ஏ, நாகர் கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மண்டைக் காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி, துணை தலைவர் சுஜி ஆகியோரும் பேசுகின்றனர். சுகிசிவம் ஆன்மிக உரையாற்றுகி றார். விழாவில் கணவரை இழந்து வாழும் 50 ஏழை இந்து பெண்களின் வாழ் வாதார மேம்பாட்டிற்கு உதவித்தொகை, பெற் றோரை இழந்து வாழும் ஏழை இந்து மாணவர் கள் 100 பேருக்கு உதவித் தொகை ஆகியன வழங் கப்படுகிறது.

    கோவில் மேல்சாந்தி பகவதி குருக்கள் நன்றி கூறுகிறார். மாலை 3 மணிக்கு பக்தி இன்னிசையும், இரவு 8 மணிக்கு பக்தி நெறி நன்கு வளர்த்துள்ளது. வளர வேண்டும் என்ற தலைப் பில் சுகிசிவம் நடுவராக கொண்டு வழக்காடு மன் றம் நடக்கிறது. விஜயசுந்தரி, ராஜாராம் ஆகியோர் பேசுகின்றனர்.

    2-ம் நாள் விழாவில் மார்ச் 6-ந் தேதி காலை 4.30 மணிக்கு நடை திறப்பு. 5-க்கு கணபதி ஹோமம், பகல் 12-க்கு அம்ம னுக்கு பூஜை பொருட்கள் கொண்டு வருதல், 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6 மணிக்கு தங்கத் தேர் உலா, இரவு 9-க்கு அத்தாழ பூஜை ஆகியன நடக்கிறது. மாலை 6.30-க்கு சமய சொற்பொழிவில் அம்பாள் பெருமை பற்றி கார்த்திகா ராஜா பேசுகி றார். இரவு 8-க்கு பரத நாட்டிய நிகழ்வு நடக்கிறது.

    3-ம் நாள் விழாவில் 7-ந் தேதி காலை 4.30-க்கு திரு நடை திறப்பு, 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், பகல் 1-க்கு உச்சகால பூஜை, மாலை 5.30-க்கு பவுர்ணமி திருவிளக்கு பூஜை, 6-க்கு தங்கத் தேர் உலா. இரவு 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் ஆகியன நடக்கிறது. மாலை 6.30-க்கு சிவசங்கரின் சமய சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு கதகளி ஆகியன நடக்கிறது.

    4-ம் நாள் விழாவில் 8-ந் தேதி காலை 4.30-க்கு நடை திறப்பு, 9.30-க்கு அம் மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், 12-க்கு சந்தன குட பவனி, 1-க்கு உச்சகால பூஜை, மாலை 6-க்கு தங்கத் தேர் உலா, மாலை 6.15-க்கு சந்தனக்குட பவனி, இரவு 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் ஆகியன நடக்கிறது. மாலை 6.30-க்கு சமய சொற்பொழிவில் தேச மங்கையர்கரசி பேசுகிறார். இரவு 8 மணிக்கு மகதி குழுவினரின் கர்நாடக மற்றும் பக்தி இன்னிசை நடக்கிறது.

    5-ம் நாள் விழாவில் 9-ந் தேதி காலை 4.30-க்கு நடை திறப்பு, 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், 1 மணிக்கு உச்சகால பூஜை, இரவு 9-க்கு அத்தாழ பூஜை, 9.30-க்கு அம்மன் வெள் ளிப்பல்லக்கில் எழுத்தரு ளல் ஆகியன நடக்கிறது. மாலை 6.30-க்கு கோமதி திருநாவுக்கரசுவின் சமய சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு பரத நாட்டியம் ஆகியன நடக்கிறது.

    6-ம் நாள் விழாவில் 10-ந் தேதி காலை 6.30-க்கு உஷ பூஜை, 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், பகல் 12 மற்றும் 12.30க்கு சந்தன குட பவனி, 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6 தங்கத்தேர் உலா, இரவு 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், இரவு 11 மணிக்கு மேல் 12-க்குள் வலியபடுக்கை பூஜை ஆகியன நடக்கி றது. மாலை 6.30-க்கு சிவசங்கரின் சமய சொற் பொழிவு, இரவு 8-க்கு வீர மணி ராஜு குழுவினரின் பக்தி இன்னிசை ஆகியன நடக்கிறது.

    7-ம் நாள் விழாவில் 11-ந் தேதி காலை 4.30-க்கு நடை திறப்பு, 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக் கில் எழுந்தருளல், பகல் 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6-க்கு தங்கத்தேர் உலா, இரவு 7-க்கு சிறப்பு வில்லிசை, இரவு 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் நடக்கிறது. மாலை 6.30-க்கு சமய சொற்பொழிவில் ராஜா ராம் பேசுகிறார். இரவு 8 மணிக்கு இளசை சண்முகம் குழுவினரின் பக்தி இன்னிசை நடக்கிறது.

    8-ம் நாள் விழாவில் 12-ந் தேதி காலை 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக் கில் எழுந்தருளல், 12.30-க்கு மாவிளக்கு பவனி வருதல், 1 மணிக்கு உச்சகால பூஜை, இரவு 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்த ருளல் நடக்கிறது. மாலை 6.30-க்கு கோமதி திருநாவுக் கரசு சமய சொற்பொழிவு, இரவு 8-க்கு சுசித்ரா பால சுப்பிரமணியனின் பக்தி இன்னிசை சொற்பொழிவு ஆகியன நடக்கிறது.

    9-ம் நாள் விழாவில் 13-ந் தேதி காலை 9-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், 11-க்கு சந்தனகுட பவனி, பகல் 12-க்கு சந்தனகாப்பு காவடி, பகல் 1-க்கு உச்சகால பூஜை, இரவு 9.30-க்கு பெரிய சக்கர தீவட்டி பவனி வருதல் ஆகியன நடக்கிறது. மாலை 6.30-க்கு சமயசொற்பொழிவில் மோகன சுந்தரம் பேசுகிறார். இரவு 8-க்கு ஆய்க்குடி குமார் குழுவினரின் பஜன்ஸ் நடக்கிறது.

    10-ம் நாள் விழாவில் 14-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், அதிகாலை 3.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், காலை 4.30-க்கு அடியந்திர பூஜை, காலை 6 மணி முதல் குத்தியோட்டம், மாலை 6-க்கு தங்கத்தேர் உலா, மாலை 6.30 -க்கு சாயரட்சை பூஜை, இரவு 9-க்கு அத்தாழ பூஜை ஆகியன நடக்கிறது.

    இரவு 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், இரவு 12. மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் திருக் கோவிலுக்கு கொண்டு வருதல், இரவு 12.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை ஆகியன நடக்கிறது. மாலை 6.30-க்கு சுந்தரராமின் சமய சொற்பொழிவு. இரவு 8-க்கு ஹரி கதை மற்றும் இன்னிசை விருந்து ஆகியன நடக்கிறது.

    8-ம் கொடை விழா மார்ச் 21-ந் தேதி சிறப்பு பூஜையுடனும், மார்ச் 25-ந் தேதி மீனபரணி கொடை விழா வலியபடுக்கை பூஜை யுடனும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    ×